உடுமலை, ஆக.19 - திருமூர்த்தி மலை பகுதி யில் திங்கட்கிழமை பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டு, அடிவாரப் பகுதியில் இருக்கும் அமண லிங்கேஸ்வரர் கோவிலை வெள்ள நீர் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதியில் திங்கட்கி ழமை காலை முதல் பெய்த கனமழையின் காரணமாக பஞ்சலிங்க அருவி மற்றும் அடி வார கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்ப டவில்லை. மேலும், மதியம் கோவில் பகுதி யில் இருக்கும் ஆற்றில் திடீர் வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டதால் கோவிலை சுற்றி தண்ணீர் சூழ்ந்து சென்றது.