சேலம், டிச.2- ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக மலைப்பாதை சாலை களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மேலும், பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற் காடு, தமிழ்நாட்டின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு ஞாயிறன்று ஒரே நாளில் ஆயிரம் மில்லி மீட்டருக்கும் அதிக மாக மழை பெய்ததால், மலைப் பாதைகளில் மழைநீர் பெருக்கெ டுத்து ஓடியது. மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே சாலையில் பெருக்கெடுத்து தண்ணீர் ஓடிய தால், மலைப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, குப்பனூர் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில், மண் சரிவு ஏற்பட்ட 2 ஆவது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் திங்களன்று ஆட்சியர் ரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறுகை யில், ஏற்காடு மலைப்பாதை வழி யாக வழிந்தோடும் தண்ணீரும், தொடர் மழையும் ஒன்று சேர்ந்து ஏற் காடு மலைப்பாதையில் மண் அரிப்பை ஏற்படுத்தியதால், ஆங் காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள் ளன. 2 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற் பட்டதன் விளைவாக தற்காலிக மாக வாகனப் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள் ளது. அதேபோன்று, ஒருசில இடங் களில் கல்வெட்டுப் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண் ணீர் வடிந்து செல்கிறது. எனவே, ஏற்காடு சாலையில் தற்காலிகமாக அனைத்து விதமான போக்குவரத் தினையும் நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது, என் றார். காற்றுக்கு சாய்ந்த 20 ஏக்கர் வாழை மரங்கள்! இதேபோன்று, நாமக்கல் மாவட் டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம்புதூர் ஊராட்சிக்குட் பட்ட தோட்டமுடையான்பட்டி, வேலம்பட்டியில், விவசாயிகள் தமிழ்ச்செல்வன், கருப்பையா, சண் முகம், செந்தில்குமார் உள்ளிட் டோர் 20 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தனர். வங்கக்கடலில் ஏற் பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை யால், பெஞ்சல் புயல் உருவாகி, பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், சனி யன்று பெய்த தொடர் மழையா லும், சூறைக்காற்றாலும் அங்கு பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடி யோடு சாய்ந்து விழுந்தன. அடுத்த ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, தோட்டக்கலைத்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்க வேண் டும், என பாதிக்கப்பட்ட விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.