வெள்ளக்கிணறு பகுதியில் அண்மையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலை யில், இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியு றுத்தியிருந்தார். இதனையேற்று, திங்களன்று கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பி.ஆர்.நடராஜன் எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, மாமன்ற உறுப்பினர்கள் வி.இராமமூர்த்தி, சித்ரா தங்கவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.