districts

img

பில்லூர் அணை நிரம்பயதால் பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணை நிரம்பியதால்  4 மதகுகள் வழியாகத் தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.  

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான நீலகிரி மற்றும் கேரளா மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். அணையின் நீர்மட்டம் 97 அடியைக் கடந்த நிலையில் அணையிலிருந்து 4 மதகுகள் வழியாகத் தண்ணீர் பவானி ஆற்றில் இன்று  திறந்து விடப்பட்டது.  

இது விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ, பரிசல்கள் மூலம் ஆற்றைக் கடக்க முயற்சிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.