திருவனந்தபுரம், ஜுன் 27- கேரளம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறு களில் வெள்ளப்பெருக்கும் பரவலான சேதமும் ஏற்பட்டுள்ளது. திருவனந்த புரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து சிறிய அணைகள் திறக்கப்பட்டன. இடுக்கி நீர்த்தேக்கத்தில் இரண்டு அடியும், முல்லைப் பெரியாறில் ஒன்றரை அடியும் தண்ணீர் உயர்ந்தது. கடலோரப் பகுதிகள் கடல் அலை யால் தாக்கப்படுகின்றன. மலைப்பகுதி களில் உள்ள சுற்றுலா மையங் களுக்குள் நுழைவது தடைசெய்யப் பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழையுடன் பலத்த காற்றும் தொடர்ந்து வீசுகிறது. மாநிலத்தில் 126 வீடுகள் பகுதியள வில் இடிந்து விழுந்தன. திருவனந்த புரத்தில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 77 பேர் நான்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். 3 மாவட்டங்களில் ஆரஞ்சு 7 இல் மஞ்சள் அலர்ட் மகாராஷ்டிரா கடற்கரையிலிருந்து மத்திய கேரள கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் கேரளா கடற்கரையில் பலத்த மேற்கு மற்றும் தென்மேற்கு காற்று காரண மாக கனமழை பெய்து வருகிறது. அதன் தாக்கத்தில் கனமழை தொடரும். வியா ழனன்று, வயநாடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக் கோடு மற்றும் காசர்கோடு மாவட்டங் களில் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப் பட்டது. கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா கடற்கரையில் உள்ளவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப் பட்டுள்ளது. தயார் நிலையில் கேரளம் கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பேரிடரை எதிர் கொள்ள மாநிலம் தயாராக உள்ளது. வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் முன்னிலையில், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடத்தி, நிலைமை யை ஆய்வு செய்தனர். மாநில மற்றும் மாவட்ட அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் தாலுகா அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும். இடுக்கி, பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணா குளம், மலப்புரம், கொல்லம், கோழிக் கோடு, திருச்சூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்கள் ஈடு படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நடவடிக்கை களுக்காக தலா 1 கோடி ரூபாய் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள் ளது. ஆபத்தான மரங்களை உடனடி யாக வெட்ட வேண்டும். இதுதொடர் பாக டெண்டர் நடைமுறைக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்டுமான தளங்களில் பாது காப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும். பேரிடர் மேலாண்மைக்கான முன்னேற்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்தார்.