திருப்பூர், நவ.8- மனிதகுல வரலாற்றில் முதல் முறை யாக சுரண்டலை ஒழித்து சமத்துவத்தை நிலை நாட்டிய ரஷ்ய சோசலிசப் புரட்சி தினமான நவம்பர் 7ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் எழுச்சியு டன் நடத்தப்பட்டன. மேலும், திருப்பூர் தியாகி பழனிச் சாமி நிலையத்தில் வெள்ளியன்று நவம் பர் புரட்சி தின சிறப்புப் பேரவை நடைபெற் றது. கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.காளியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில், கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் கே.சுவா மிநாதன் சோசலிசப் புரட்சி தினம் குறித்து கருத்துரை ஆற்றினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சமமான வாழ்க் கையை சாதித்துக் காட்டிய 107 ஆவது புரட்சி தினம் வியாழக்கிழமை உல கெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு பகுதிகளில் கொடி யேற்று நிகழ்ச்சிகளை நடத்தியது. திருப் பூர் அவிநாசி சாலை தியாகி பழனிச் சாமி நிலையம் முன்பு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தரராசன் தலைமை ஏற்றார். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி, கூடியிருந்தோ ரின் எழுச்சி முழக்கங்களுக்கு இடையே செங்கொடியை ஏற்றி வைத்தார். சிஐடியு தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருச்செல்வன், கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் ஆகியோர் சோசலிசப் புரட்சி தினம் குறித்து உரையாற்றினர். திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாநல்லூர், பாண்டியன் நகர், தோட்டத்துப்பாளையம், குருவா யூரப்பன் நகர் (சே), அங்கேரிபாளை யம் ஆகிய இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி கிளையினர் நவம்பர் புரட்சி தினக் கொடியேற்று நிகழ்வை நடத்தினர். வேலம்பாளையம் நகரில் வேலம்பா ளையம் கட்சிக் கிளைகள் சார்பில் அலு வலகம் முன்பாக கொடியேற்றப்பட் டது. அதேபோல் அனுப்பர்பாளையம் புதூர் கிளை முன்பாக புரட்சி தின கொடி யேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கட்சி ஊழியர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஊத்துக்குளி தாலுகாவில் குன் னத்தூர், காடபாளையம், மொரட்டுப்பா ளையம், பெரியபாளையம், கரைப்பா ளையம், நடுப்பட்டி, சாலப்பாளையம், பல்லகவுண்டன்பாளையம் ஆகிய எட்டு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் புரட்சி தினக் கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கு மார், தாலுகாச் செயலாளர் கே.சரஸ் வதி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் பாலமுரளி, மூர்த்தி, பிரகாஷ், சிவராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகாச் செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். தாராபுரம் நகரத்தில் நவம்பர் புரட்சி தின கொடியேற்று நிகழ்ச்சி தாரபுரம் கட்சி அலுவலகத்தின் முன்பாக நடை பெற்றது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர் வெங்கட்ராமன் மற்றும் மேகவர்ணம் ஆகியோர் முன்னிலை யில் மாரிமுத்து செங்கொடியை ஏற்றி வைத்தார். திரளானோர் கலந்து கொண் டனர். அவிநாசி ஒன்றியம் ஆட்டையம்பா ளையத்தில் புரட்சி தின கொடியேற்றப் பட்டது. அதேபோல உடுமலை அந்தியூர் மற் றும் சடையபாளையம் கிளைகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன் செங்கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், உடு மலை ஒன்றியச் செயலாளர் எஸ். ஜெகதீசன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் கி.கனகராஜ், சம்சீர் அகமத் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.