இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு அமைப்பு தினம் ஞாயிறன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தில் அன்னூர், சர்க்கார் சாமக்குளம், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அர்ஜூன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தீபிகா, சக்திவேல், பிரதீப், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.