சேலம், ஜூன் 26- புதிய மீன்பிடி உரிமம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, கருத்து கேட்புக் கூட்டத்திலிருந்து மேட்டூர் அணை மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில், மேட்டூர் அணை மீனவர் களின் மீன்பிடி உரிமக் கட்டணத்தை உயர்த்தவும், மீன்பிடி உரிமங்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் மேட்டூர் அணை மீனவர்களின் கருத்து கேட்புக் கூட்டம் செவ்வாயன்று மேட்டூர் அணை அரசு மீன் விதைப்பண்ணையில் நடை பெற்றது. மீன்வளத்துறை உதவி இயக் குநர் சுப்பிரமணியம் தலைமை வகித் தார். உதவி இயக்குநர் உமா கலைச் செல்வி முன்னிலை வகித்தார். இக்கூட் டத்தில் நூற்றுக்கணக்கான மீனவா்கள் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரி வித்தனர். அதில், மீனவர்களின் வாழ்வாதா ரத்தை உயர்த்தாமல், மீன்பிடி உரிமக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. ஏற்கெ னவே வழங்கப்பட்ட 1000 மீன்பிடி உரி மங்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக் கப்படுவதில்லை. கள்ளத்தனமாக மீன் பிடித்து விற்பதைத் தடுக்க மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்குஞ்சுகளை பிடிப்போரின் வலை களை மட்டுமே மீன்வளத்துறை பறி முதல் செய்கிறது. பரிசல்களை பறிமு தல் செய்வதில்லை. 2014 ஆம் ஆண் டுக்கு பிறகு மீன் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் உயர, மீன்களை பொது ஏலம் மூலம் கொள்முதல் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என மீன வர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த் திய பிறகு புதிய மீன்பிடி உரிமம் வழங்கு வது குறித்தும், உரிமத்தொகையை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்க லாம் என மீனவர்கள் தெரிவித்தனர். அப்போது, புதிய மீன்பிடி உரிமம் பெறுவதற்கு வந்தவர்களுக்கும், மீன வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீன்வளத்துறை அதிகாரி கள் ஆலோசனைக் கூட்டம் எனக்கூறி விட்டு புதிய மீன்பிடி உரிமம் வழங்க முயற்சிக்கின்றனர் எனக்கூறி மீனவர் கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனால் மீனவா் கருத்து கேட்புக் கூட் டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் மீன்வளத்துறை அதிகாரிகளும், புதி தாக மீன்பிடி உரிமம் கேட்க வந்தவர்க ளும் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டம் நிறைவு பெற்றது. புதிதாக மீன்பிடி உரிமம் வழங்குவதற்கு எதிர்ப் புத் தெரிவித்து, எழுத்துப்பூர்வமான கடி தத்தை மீன்வளத்துறை உதவி இயக்கு நரிடம் மீனவர்கள் அளித்தனர்.