நாமக்கல், ஜன.22- காவிரி ஆற்றில் ஆகாயத்தாமரை செடிகளை முழுமையாக அகற்றி, மீன் வளத்தை பாதுகக்க வேண்டும் என மீன வர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத் தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் வழியாக காவிரி ஆறு செல்கிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்ப டும் நீரின் அளவு அதிகரிக்கும் போதெல் லாம் அளவுக்கு அதிகமான ஆகாயத்தா மரை செடிகள், காவிரி ஆற்றில் மிதந்து வந்து, பள்ளிபாளையம் பழைய பாலத் தில் தேங்கி விடுகிறது. இப்படி ஒவ் வொரு முறையும் செடிகள் அதிகமாக தேங்குவதும், உள்ளூர் பரிசல் ஓட்டி கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் அதனை அகற்றுவதும் தொடர்கதை யாக இருந்து வருகிறது. தற்போது காவிரி ஆற்று பழைய பாலம் முழுவ தும் சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆகாயத் தாமரை செடிகள் காவிரி ஆற்று நீரை சூழ்ந்துள்ளதால், தினந்தோறும் பரிச லில் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசல் ஓட்டி முருகன் என்பவர் கூறுகையில், ஆகாயத்தாமரை செடிகள் ஆற்று நீரை முழுவதுமாக மூடியிருப்பதால், மீன்கள் மிகுந்த ஆழத்திற்கு சென்று விடுகிறது. அதேசமயம் மீன்களுக்கு போதுமான அளவு காற்று கிடைக்காமல், மீன்வளம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிக ளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் குளிக்கும் பொதுமக்க ளுக்கு கண் எரிச்சல், தோல் சம்பந்தப் பட்ட நோய்கள் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தா மரை செடிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலி யுறுத்தியுள்ளார்.