districts

img

ஜனத்தொகையில் முதலிடம் ஒலிம்பிக்கில் கடைசி இடம்

ஈரோடு, ஆக. 14- திறமையான இளைஞர்கள் இருந் தும், அந்த திறமையை உருவாக்கி, ஒழுங்குபடுத்தி, முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம் சரியாக இல்லை. எனவே ஜனத்தொகையில் முதலிடத்தில் உள்ள நாம், ஒலிம்பிக் கில் கடைசி இடத்தில் இருக்கிறோம் என  விஞ்ஞானி ஏ.சிவதாணு பிள்ளை வேதனை தெரிவித்தார். ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு நாள் விழா, சக்தி மசாலா நிறுவனங்க ளின் தலைவர் பி.சி.துரைசாமியின் தலைமையில் நடைபெற்றது. இதில், மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர்  ஸ்டாலின் குணசேகரன். காவல் கண் காணிப்பாளர் கு.ஜவகர், முதன்மை கல்வி அலுவலர் த.சம்பத், சென்னை  பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், மாவட்ட நூலக அலுவலர் இரா.யுவ ராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல் வர் எஸ்.மனோகரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இந்நிகழ்வில், விஞ்ஞானி ஏ. சிவதாணுபிள்ளை பங்கேற்று கருத் துரையாற்றினார். அவர் பேசுகையில், என் சிறு வயதில் புத்தகங்கள் வாங்க எனக்கு வசதி கிடையாது. நாங்கள் நூலகத்திற்குத் தான் போவோம். ரஷ்யா 1958 அக்டோபர் 4  இல்  செயற்கைக் கோளை மேலே அனுப் பியது. ரொம்ப ஆச்சரியாமாக இருந் தது. அது ஒரு பெரிய தூண்டுதலை என்னுள் உண்டாக்கியது. அது சம்பந்த மான புத்தகங்களைத் தேடியபோது ஒரு  புத்தகம் கிடைத்தது. அது கான்டன் டைன் டிசோவ்ல்ஸ்கி எழுதிய புத்தகம். அவருக்கு சிறு வயதிலிருந்தே காது  கேட்காது. அதனால், அவரை பள்ளி யில் சேர்க்க மறுத்தனர். அவரது  அம்மா வீட்டிலேயே படிக்கச் சொல்லிக் கொடுத்தார். புத்தகங்களைப் படித்து படித்து ராக்கெட் தொழில்நுட்பத்தை எழுதினார். இன்றைக்கும் நாம் அனுப் பும் ராக்கெட்டிற்கான தொழில்நுட்பம் அதுதான். மனிதன் செவ்வாய் கிரகத் தில் குடியேறுவான் என்று 1896 லேயே  அவர் எழுதியிருக்கிறார். அதற்கான வரைபடத்தையும் வரைந்துள்ளார்.  அதுபோல மனிதன் பூமியை விட்டு வேறு கிரகத்தில் குடியேறுவான் என் றும் எழுதியிருக்கிறார். அதைத் தான்  நாங்கள் தற்போது ஆராய்ந்து கொண்டி ருக்கிறோம். அத்தகைய அறிவைப் பார்த்து உலகமே அவரைப் பாராட்டி யது. பள்ளியில் அனுமதிக்க மறுக்கப் பட்டவருக்கு பேராசிரியர் என்று பட்டம்  கொடுத்து பெருமைப் படுத்தினர். அவர் வசித்த இடம் மாஸ்கோவிலிருந்து 300  கிமீ தொலைவில் இருந்தது. அந்த  இடத்தைப் போய் பார்க்கும் ஆர்வம்  எனக்கு ஏற்பட்டது. அங்கு சென்றேன்.  அவர் வசித்த இடம் வான்வெளி கண் காட்சியகமாக மாற்றப்பட்டிருந்தது.  அங்கே அவர் கையால் செய்த தொலை நோக்கி இருக்கிறது. சன்னல் வழியாக  செவ்வாயைப் பார்த்து ஆராய்ச்சி  செய்திருக்கிறார். அதற்குக் காரணமாக  இருந்தது புத்தகங்கள்தான். ஆக  அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோளாக  இருந்தது புத்தகங்கள் தான். இன்றைய தலைமுறை புத்தகங்கள்  படிப்பதை விரும்பவில்லை. நாங்கள் படிக்கும் போது புத்தகங்கள் மட்டும் தான் இருந்தது. வேறு எதுவுமே இல்லை. ரேடியோ அப்போதுதான் வந் தது. டிவி கிடையாது. கம்ப்யூட்டர் கிடை யாது. தற்போது அப்படி இல்லை. போன்  வைத்திருக்கிறார்கள், இன்டர்நெட்டிற் குள் போய் விடுகின்றனர். புத்தகம் படிப் பதற்கு நேரம் இல்லை. சூழ்நிலை அப் படியே மாறிவிட்டது. ஆனால், எவ் வளவு இன்டர்நெட், யூடியுப் பார்த்தா லும் புத்தகத்தில் கிடைக்கும் அறிவு வேறு எதிலும் கிடைக்காது. ஆக குழந் தைகளை புத்தகம் படிக்க தூண்ட வேண்டும். விலகிச் செல்ல விடக் கூடாது.

புத்தகத் திருவிழாக்களிள் வெறும் புத்தகங்களை மட்டும் வைத்திருக்கக் கூடாது. அனைவரையும் கவரும் வகை யில் நடத்த வேண்டும். குழந்தைகள் நிறைய வருமாறு செய்ய வேண்டும். கால மாற்றத்திற்கேற்ப மாற்றத்தை உரு வாக்க வேண்டும்.  சுதந்திரம் அடைந்த பிறகு நிறைய  மாற்றங்கள் வந்திருக்கிறது. வான் வெளியில் சந்திராயன் அனுப்பி விட் டோம். சந்திராயன் 4 வரப் போகிறது. அதில் சந்திரனிலிருந்து சேம்பிள் (மண்)  எடுத்து வரப்போகிறோம். செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் போகி றோம். மனிதனை விண்ணிற்கு அனுப்பு வதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது.  வான்வெளியில் புதுப்புது திட்டங்கள்  வரவிருக்கிறது. அமெரிக்கா, சீனா, ரஷ் யாவுடன் இந்தியாவும் வான்வெளி ஆய் வில் முன்னேற்றத்தில் உள்ள நாடுகள். 2040 இல் சந்திரனில் தொழிற்சாலை அமைக்க விருக்கிறோம்.  சூரியன் என்பது ஹைட்ரஜனும், ஹீலியமும் சேர்ந்த வாயு மண்டலம். அதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் தான்  வெளிச்சமும், வெப்பமும். சந்திரனில் வளிமண்டலம் இல்லாததால் அது அங்கே தேங்கிக் கிடக்கிறது. அதிலி ருந்து ஹீலியம் 3 உருவாகியிருக்கிறது. நியூக்ளியர் ஆற்றலிற்காக யுரேனி யத்தைப் பயன்படுத்தும் போது பாது காப்பு பிரச்சனைகள் வருகிறது. அத் தகைய கதிர்வீச்சு அபாயம் இல்லாதது ஹீலியம் 3. யுரேனியத்தைவிட 100 மடங்கு ஆற்றலை அளிக்கக் கூடியது ஹீலியம் 3. அதைக் கொண்டு வருவ தற்கு அங்கே தொழிற்சாலை தேவைப் படுகிறது. நமது சந்ததியினர் அங்கே வேலை செய்வார்கள். அதற்கான தூண் டுதலை உண்டாக்கக் கூடியது ஆராய்ச் சிகளும், புத்தகங்களும், இதுபோன்ற பேச்சு எல்லாமும் சேர்ந்துதான்.  தமிழ்நாட்டில் ஒரு புரட்சி உருவாக  வேண்டும் என்றால் மாணவர்களை இள வயதில் படைப்பாற்றல் மிக்கவர்களாக் கும் வகையில் கல்வி முறை வேண்டும்.  ஜனத்தொகையில் முதலிடம், ஆனால்,  ஒலிம்பிக்கில் கடைசி இடம். திறமை யில்லாமல் இல்லை. அந்த திறமையை  உருவாக்கி, ஒழுங்குபடுத்தி, முன்னேற் றத்திற்குக் கொண்டு செல்லும் திட்டம்  சரியாக இல்லை.  உலகின் மிகப் பெரிய ஜனநாயக  நாடு இந்தியாவில் மக்கள் தொகை, இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்.  அப்துல் கலாம் அமெரிக்காவிற்குச் செள்றபோது. அவர்கள் கணிணி தராமல், சாப்பாடு கொடுத்து அனுப்பி  விட்டனர். 14 இளைஞர்கள் சேர்ந்து 2  வருடத்தில் பெரிய சூப்பர் கம்ப்யூட் டர் தயாரித்தனர். அது அமெரிக்காவை விட 20 மடங்கு சக்தி வாய்ந்தது. அத் தகைய மூளை உள்ளவர்கள் நம் இளை ஞர்கள். அவர்களை நாம் ஊக்கப்ப டுத்த வேண்டும். அதற்குப் புத்தக வாசிப்பு தேவை.  பிரம்மோஸ் ஏவுகனை என்பது உலகில் முதன்மையானது. அது ரஷ்யா வுடன் இணைந்து தயாரித்த ஏவுகணை. அமெரிக்க ஏவுகணை ஒலியின் வேகத்தை விட குறைவானது. நாம் ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு கூடுதலான வேகத்தில் ஏவுகணை விட திட்டமிட்டோம். அதற்கு ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்தோம். பிரம்மபுத்திரா- மாஸ்கோவா ஆகிய இரண்டு நதிக ளின் பெயரிலான பிரம்மோஸ் ஏவு கணை தயாரித்த குழுவின் தலைவராக  நான் இருந்தேன். அந்த ஏவுகணை முப் படைகளிலும் இருக்கிறது. 25 ஆண்டு களைக் கடந்த பிறகும் அமெரிக்கா இன் றும் அதனை தயாரிக்க வில்லை. சீனா விடமும் அதுபோன்ற ஏவுகணை இல்லை. அதுபோன்ற சிந்தனை நமது  இந்தியர்களிடம் இருக்கிறது. குறிப் பாக தமிழர்களிடம். வான்வெளி துறை யில் அனைத்து திட்டங்களின் தலைவர் களும் தமிழர்கள் தான்.   எல்லாரும் முடியாது என்பதை முடிப்பதுதான் திறமை. உயர்ந்த குறிக் கோள், கடின உழைப்பு, அறிவு வேட்கை, மனந்தளராமை இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும். எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவை  எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ் சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். மனதில் உறுதி வேண்டும். வாக்கினில் இனிமை வேண்டும் என்ற  பாரதியாரின் கவிதை வரிகளுடன்  நிறைவு செய்தார். கோ.விஜயரா மலிங்கன் நன்றி கூறினார்.