உடுமலை, ஜூன் 26 - உடுமலை அரசு மருந்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் புதனன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு தீ தடுப்பு குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உடுமலை தீயணைப்பு துறை சார்பில் அரசு மற்றும் தனி யார் நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அவ சர காலங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்து தீயணைப்பு துறையினரால் பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உடுமலை அரசு மருத்துவமனையில் தீ விபத்துகளை தடுப்பது மற்றும் விபத்து ஏற்பட்டால் அவற்றிலி ருந்து மக்களையும் தங்களையும் எப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு உடுமலை தீ தடுப்பு செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.