சேலம், ஜூன் 21- சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரின் பிரதிநிதி விஷ்ணுமூர்த்தி ஆஜராகாததால், சென்னை தொழிற் தீர்ப்பா யம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும், 26 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை தொழிற்தீர்பாயத்தில் சேலம் பெரியார் பல் கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பெரியார் பல்கலைக் கழக தொழிலாளர் சங்கம் தொடுத்த பணிநிரந்தர வழக்கு (09/2019) விசாரணைக்கு வந்தது. இதனுடன் தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் மூவரின் புகார் (02/2022) வழக்கும் நிர்வாகத்தரப்பு குறுக்கு விசாரணைக்காக வந்தது. இந்த விசாரணையில் சங்கத்தின் பொதுச்செயலாளர் மற்றும் அவ ரது வழக்கறிஞர்கள் ஆஜர் ஆனார்கள். ஆனால், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரின் பிரதிநிதி விஷ்ணுமூர்த்தி ஆஜராக வில்லை. இதனால் நீதிபதி தீப்தி அறிவுநிதி, தனது கடுமையான கண்டனத்தை தெரிவித் தார். மேலும், ஒவ்வொரு வழக்கிற்கும் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் நான்காயிரம் ரூபாய் அபராதத்தை சேலம் பெரி யார் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு விதித்து உத்தரவிட் டார். மேலும், வருகிற 26/06/23க்கு முன்பு அபராத தொகை யினை பல்கலைக்கழக பதிவாளர் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், 26.06.2023 அன்று நிர்வாக தரப்பில் சாட்சி ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராகாத பட்சத்தில் சாட்சி சொல்ல தகுதியிழக்க நேரிடும் என்று எச்சரித்து நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.