districts

img

தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை: திரைக்கலைஞர் சிவக்குமார் குற்றச்சாட்டு

கோவை, ஜூலை 20- அரசுப்பள்ளிகளில் அரண் மனை போன்ற அனைத்து  வசதிகளும் உண்டு. ஆனால், தனியார் பள்ளிகளில் ப்ரீ கேஜியில் சேர்ப்பதற்குகூட கட்டண கொள்ளை நடை பெறுவதாக திரைக்கலை ஞர் சிவகுமார் குற்றஞ்சாட்டி யுள்ளார். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள அரசூரில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி 60 ஆவது ஆண்டு வைர  விழாவினை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு முழுவதும்  நடைபெற்ற இந்த வைர விழா கொண்டாட்டத்தின் நிறை விழாவில் திரைக்கலைஞரும், சூலூர் பகுதியைச் சேர்ந்த வருமான சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில், திராவிட மொழியில் திருக்குறள் உள்ளது என பலரும் அறிந்திராத நிலையில், இதனை முதலில் ஆங்கிலேயர்கள் தான் தமிழ் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள். இது  போல அரசுப்பள்ளிகளில் தற்போது அனைத்து வசதிகளை யும் கொண்டுள்ளது. நாங்கள் படித்த காலத்தில் இதுபோன்ற வசதிகள் இல்லை. தனியார் பள்ளிகளில் ப்ரீ கேஜி வகுப்பில் சேர்ப்பதற்கு கூட இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வாங்கப்படுகிறது, என்றார். இவ்விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்த சாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, ஊராட்சி தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ், வைர விழா குழுத்தலைவர் கோவிந்தராஜ், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்ப ரசு, பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.