districts

img

பொள்ளாச்சி நகர மன்றத் தலைவர் தலைமையில் கள ஆய்வு

பொள்ளாச்சி, செப்.18- பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்க ளின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நக ராட்சி நிர்வாக அதிகாரிகள் நகர மன்றத்  தலைவர் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி நக ராட்சியில் உள்ள 36 வார்டுகளின் ஒவ்வொரு  வாரமும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்  நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்க ளுக்கு அவ்வப்பொழுது தீர்வுகள் எட்டப்பட் டும் வருகிறது.  இதன் தொடர்ச்சியாக நேரடியாக தின சரி 3 வார்டுகள் வீதம் ஆய்வு செய்ய முடிவு  செய்யபட்டு புதனன்று பொள்ளாச்சி நகராட் சிக்குட்பட்ட 1,2,3 வார்டுகளில் நகர மன்றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நக ராட்சி ஆணையாளர் கணேசன் உள்ளிட்ட  நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். இதில், வடுகபாளையம் நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட நகர மன் றத் தலைவர் பள்ளி வகுப்பறை கழிப்பி டம் சமையலறை கூடம் மற்றும் காலை  சிற்றுண்டி திட்டம் குறித்தும் மாணவர்க ளுக்கு அடிப்படை தேவைகள் என்ன என்று  ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.