உடுமலை, ஜன.17- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று உடு மலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அனிவித்து மறியாதை செலுத்தப்பட்டது. உடுமலை திருவள்ளுவர் திருக்கோட்டத்தில் திருவள்ளு வர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவர் ராஜ சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந் தினராக உடுமலை மக்கள் பேரவையின் முத்துக்குமாரசாமி கலந்து கொண்டு திருக்குறள் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக 37 ஆண்டு காலம் தொல்லியல் துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர் முனைவர் மூர்த்தீஸ்வரி கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை துணைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் சிவகுமார். அருள்செல்வன், பால் கென்னடி ஆகியோர் செய்திருந்தனர்.