சேலம், அக்.29- கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து கருவின் பாலினம் குறித்து தெரி வித்த வழக்கில், வாழப்பாடியைச் சேர்ந்த பெண் மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், பாலினத் தேர்வு தடுப்புப் பிரிவினர் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்தி னர். அப்போது, அந்த மருத்துவமனை ஸ்கேன் மையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்த விவரம் குறித்த ஆவ ணங்களை முறையாக பராமரிக்காமல் இருந்ததும், கருவின் பாலினம் குறித்து தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த மருத்துவமனை ஸ்கேன் பரிசோதனை மையத்துக்கு ‘சீல்’ வைத்த மருத்துவக் குழுவினர், புகாரில் சிக்கிய பெண் மருத்துவர் செல்வாம்பாவிடம் விசாரணை நடத்தி னர். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்த விவரம் குறித்த ஆவணங்களை முறையாக பரா மரிக்காதது, கருவின் பாலினம் குறித்து கர்ப்பிணிகளுக்கு தகவல் தெரிவித்தது என மருத்துவர் செல்வாம்பா மீது வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமை யியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடரப்பட்டது. 6 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், ஸ்கேன் பரிசோதனை ஆவணங்களை முறையாக பராமரிக் காதது, கருவின் பாலினம் குறித்து தெரி வித்தது உறுதியானதால், பெண் மருத் துவர் செல்வாம்பாவுக்கு 3 ஆண்டு கள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயி ரம் அபராதமும் விதித்து, வாழப்பாடி நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மதி தீர்ப் பளித்தார். மேலும், 5 ஆண்டுகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கவும் மருத்துவத்துறைக்கு பரிந்துரை செய்ய உத்தரவிட்டார்.