districts

img

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந்தமான மரங்கள் வெட்டி கடத்தல்: ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மே 9- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சொந் தமான மரத்தை வெட்டி கடத்திய குற்ற வாளிகளை கைது செய்து செய்ய வேண் டும் என வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி தொலைதொடர்பு நிறுவ னத்திற்கு சொந்தமான, ஓசூர் பகுதி யில் உள்ள தொலைபேசி நிலையங்க ளில் இருந்த 100க்கும் மேற்பட்ட சந்த னம், தேக்கு, நீலகிரி மரம், வேம்பு உள் ளிட்ட மரங்களை அனுமதி பெறாமலும் மற்றும் ஸ்க்ராப் பொருட்களையும் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ள னர். இச்சம்பவம் குறித்து போதிய ஆதா ரங்கள் எல்லாம் இருந்தும் இதுவரை  முறையான விசாரணை மேற்கொள் ளாமல் மற்றும் நடவடிக்கை எடுக்கா மல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. எனவே, நிர்வாகத்திடம் உரிய விசா ரணை நடத்தி உண்மையான குற்றவாளி கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது உரிய நட வடிக்கை மேற்கொண்டு, பிஎஸ்என் எல்-க்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய  வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி  பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐஜி இடிஒஏ மாவட்டத் தலைவர் ஆர்.ரமணா, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பருதிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ் ணன், மாநில அமைப்பு செயலாளர் ஜி. உமாராணி, ஏஐஜிஇடிஒஏ மாவட்டச் செயலாளர் பி.பிரபாகரன், ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.பாஸ்க ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.