districts

img

திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்திப் போராட்டம்

திருப்பூர், ஆக. 30 – தமிழகத்தில் சத்துணவுத் திட்டத்தை சீர்குலைப்பதை கைவிட வும், காலை உணவுத் திட்டத்தை சத்து ணவு ஊழியர்களிடம் வழங்கவும் வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங் கத்தினர் முதல்வரிடம் மடியேந்திப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டில் பள்ளிகளில் அறிமு கப்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி  திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க கோரியும், சத்துணவுத் திட்டத் தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், திமுக தேர்தல் வாக் குறுதி அளித்தபடி பணி நிரந்தரம், ஊதி யம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் புதன்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன் பாக மடியேந்தி போராட்டம் நடத்தப்பட் டது. சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் எம்.விஜயலட்சுமி தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங் கேற்ற சத்துணவு ஊழியர்கள் சேலை  முந்தானையை மடியேந்தி தமிழக முதல் வர் கோரிக்கையை நிறைவேற்ற வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் போராட்டத்தை  தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.முருகேசன் உரையாற்றினார். இப்போராட்டத்தின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் ஏ.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.