நாமக்கல், ஜூலை 31- ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து, பல்வேறு அமைப்பினர் இணைந்து புதனன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலை யத்தை அணைப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்வ தற்காக ராசிபுரம் நகராட்சியில் சில வாரங்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை உடன டியாக ரத்து செய்யக் கோரியும் ஏற்கனவே உள்ள பேருந்து நிலையத்தை விரிவு படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதியில் தொடர் போராட் டம் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரதத்தில், திரளானோர் பங்கேற்றனர்.