கோவை, ஆக. 10- தடாகம் அருகே உள்ள காளையனூர் பகுதியில் உள்ள தென்னை மற்றும் வாழை தோட்டங்களுக்குள் புகுந்து சேதப் படுத்தி வரும் காட்டு யானை கூட்டத்தால் விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மருதமலை, வடவள்ளி, தொண்டாமுத்தூர், மதுக் கரை போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக ஒற்றை மற்றும் கூட்டமாக காட்டு யானை கள் முகாமிட்டு வருகிறது. இந்த யானைகள் பொதுமக்க ளுக்கும், விவசாய நிலங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி வரு கின்றது. இதனை அடுத்து வனத் துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணித்தும், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டியும் வருகின்றனர். வனத் துறையினர் சென்ற பிறகு மீண்டும் அடுத்தடுத்து அதன் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. உணவுப் பொருட் களை தேடி அங்கு உள்ள விவசாயக் கூலி தொழி லாளிகளின் குடிசைகள் மற்றும் தோட்டங்களில் பயிரி டப்பட்டு உள்ள பயிர்களையும் சேதத்தை ஏற்படுத்தி வருகி றது. இந்நிலையில், தடாகம் அருகே உள்ள காளையனூர் பகு தியில் வெள்ளியன்று இரவு புகுந்த ஒற்றைக் காட்டு யானை மனோகரன் பொன்னுச்சாமி மற்றொரு விவசா யின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை, தென்னை மரங் கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களை சேதப்படுத்தி சென் றுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், யானை உள் ளிட்ட வன விலங்குகளுக்கு வனத்தில் தேவையான உணவு மற்றும் குடிநீர் இல்லாததின் காரணமாக, யானை, பன்னிற உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. இது விவசாய நிலங்களையும், வீடுகள், கடைகளை சேதப்ப டுத்தி வருகிறது. வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண் டும் என்றனர்.