தருமபுரி, ஜன.21- வாணியாறு நீர்த்தேக்கத்தில் தண் ணீர் குறைந்ததால், பாப்பிரெட்பட்டி வட்டத்திற்குட்பட்ட 48 நீர்நிலைகளில் தண் ணீர் இல்லை. இதனால், விவசாயத் திற்கு தண்ணீரின்றி வறட்சி நிலவும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்ற னர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் வாணியாறு நீர்த்தேக் கத்தை நம்பி சுமார் 10 ஆயிரத்து 500 ஏக் கர் பாசனப்பகுதிகளில் தென்னை, வாழை, நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு, பாக்கு, வெற்றிலை, காய்கறிகள், தக் காளி, கத்தரி, வெண்டைக்காய் என பல வகையான பயிர்களை விளைவித்து வருகின்றனர். வாணியாறு நீர்த்தேக்கத் தில் உள்ள இடதுபுற கால்வாய், வலது புற கால்வாய் மூலமாக திறந்து விடப் படும் நீரை நம்பி விவசாயிகள் விவசா யம் செய்து வருகின்றனர். பாப்பிரெட் டிப்பட்டி பகுதியில் ஏரி, குட்டை, குளம் என 48 நீர்நிலைகள் உள்ளன. குறிப்பாக, மஞ்சவாடி பூங்கன் ஏரி, பையர் நத்தம் ஏரி, சித்தேரி தடுப்பணை, வெங்கடச முத்திரம் ஏரி, பொம்மிடி கிருஷ்ண செட்டி ஏரி என மொத்தமுள்ள 48 ஏரிகளும் பெரும்பாலும் 95 சதவிகிதம் தண்ணீ ரின்றி வறண்டு கிடக்கின்றன. பாப்பி ரெட்டிப்பட்டியில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்நிலைகள் 48 இருந்த போதி லும் நீர் வழிப்பாதைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந் தாண்டு 70 மில்லி மீட்டருக்கு மேல் மழை பொழிந்தும், ஏரி, குளம், குட்டைகளுக்கு நீர் வரவில்லை என விவசாயிகள் தெரி விக்கின்றனர். இந்த நீர்நிலைகளில் தண்ணீர் இல் லாததால் பாசனப் பகுதியிலுள்ள ஆழ் துளை கிணறுகள், பாசன கிணறுகளின் நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருவது விவசாயிகளை கவலைய டைய செய்துள்ளது. நடப்பாண்டில் விவசாயம் செய்வதற்கு போதிய தண் ணீர் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவ சாயிகள் உள்ளனர். வாணியாறு அணை யின் மொத்த உயரம் 65 அடி உயரத் தில் தற்போது தண்ணீர் இருப்பின் உய ரம் 38 அடியிலிருந்து 39 வரை மட்டுமே உள்ளது. நீர் இருப்பு 173 மில்லி கன அடி ஆகும். குறைந்த அளவிலேயே தண் ணீர் இருப்பு இருப்பதால் விவசாயத் திற்கு தண்ணீர் திறந்து விடுவது தற் போது கேள்விக்குறியாகவே உள்ளது. வரும் காலங்களில் வான் மழை பொழிந் தால் மட்டுமே விவசாயிகள் வாழ்வு இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும். எனவே, வாணியாறு நீர்தேக்க கால் வாய்களை சுத்தம் செய்து ஆக்கிரமிப்பு களை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.