districts

img

ஆடுகளைப் பாதுகாப்பதா? எங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதா? வளர்ப்பு கால்நடைகளை இழந்த விவசாயிகள் குமுறல்

திருப்பூர், டிச.14 - திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் படியூர் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து விவசாயிகளின் 10  வளர்ப்பு ஆடுகள் பலியாகின. நள்ளிர வில் தெரு நாய்களிடம் இருந்து  வளர்ப்பு ஆடுகளை பாதுகாப்பதா? அல்லது கொலைகாரத் திருடர்களிட மிருந்து எங்கள் உயிரைப் பாது காத்துக் கொள்வதா என்று கிராமப் புற விவசாயிகள் குமுறலுடன் கேள்வி எழுப்புகின்றனர். படியூர் கிராமத்தில் குருமூர்த்தி என்பவரது தோட்டத்தில் சனியன்று மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் குதறின.  இதில், 14 ஆடுகள் பாதிக்கப்பட்டு, 10  குட்டி ஆடுகள் உயிரிழந்துள்ளன. நான்கு ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன. அதுவும் உயிர் பிழைக்காது  என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  அதேபோல் வெள்ளகோவில் அருகே பெட்டி வலசு என்ற இடத்தில் கோபால் என்பவரது தோட்ட வீட் டின் முன்பு கட்டப்பட்டிருந்த வெள் ளாடுகளை வெள்ளிக்கிழமை மாலை, கும்பலாக வந்த தெரு நாய் கள் கடித்தன. அருகாமையில் இருந் தவர்கள் கூச்சலிட்டத்தை அடுத்து,  நாய்கள் தப்பி ஓடின. எனினும்  வெள்ளாடுகளை நாய் கடித்ததில்  பற்கள் பதிந்துள்ளது. தெரு நாய்கள் கடித்து விவசாயிகளின் வளர்ப்பு கால்நடைகள் உயிரிழக்கும் சம்ப வம் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், ஆடுகளை பாது காப்பதற்கு தெரு நாய்களை ஒழிக்க  வேண்டும் அல்லது இறக்கும் கால் நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்துகின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர்  கூறுகையில், நள்ளிரவு நேரத்தில் தோட்டத்தின் பட்டிகளில் அடைக்கப் பட்டு இருக்கும் ஆடுகளை தெரு நாய் கள் கடித்து குதறுகின்றன. நாய்க ளின் சத்தம் கேட்டு வீடுகளில் இருந்து  வெளியே வந்து ஆடுகளை பாதுகாக் கலாம் என்றால் தற்போது பயமாக இருக்கிறது. அண்மையில் பொங்க லூர் ஒன்றியம் சேமலைகவுண்டம்பா ளையத்தில் இரவு நேரத்தில் நாய்க ளின் சத்தம் கேட்டு வெளியே வந்த  விவசாயியும், வீட்டிற்குள் இருந்த அவரது மனைவி மற்றும் மகன் ஆகி யோரும் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டனர். நகைக ளும் திருட்டுப் போயிருந்தன. இச்சூழ்நிலையில் தெரு நாய்களி டமிருந்து வளர்ப்பு ஆடுகளை பாது காப்பதா? அல்லது திருடர்க ளிடமிருந்து எங்கள் உயிரை பாது காத்துக் கொள்வதா என்று குமுறலு டன் தனது மனக்கஷ்டத்தை வெளிப்ப டுத்தினார். அதேசமயம் தெரு நாய்களால்  பலியான வளர்ப்பு கால்நடைக ளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்ப டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார் பில் 45 நாட்கள் காலக்கெடு கொடுக் கப்பட்டுள்ளது. தற்போது இதில் 30  நாட்கள் கடந்து விட்டது.  எனவே இப்போது உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு கோரி வருவாய் துறையை, மாவட்ட நிர் வாகத்தை முற்றுகையிட்டு கேள்வி  எழுப்பினால், ஏற்கனவே நாங்கள் 45  நாட்கள் உறுதிமொழி கொடுத்திருக் கிறோமே? அதுவரை காத்திருக்க வேண்டும் என அதிகாரிகள் கூறுவார் கள், என விவசாயிகள் தயக்கம் காட் டுகின்றனர்.  இதுவரை இழப்பீடு வழங்குவ தற்கான அரசு எடுத்த நடவடிக்கை  எதுவும் வெளிப்படையாக தெரியாத  நிலையில், விவசாயிகள் கேள்விக் குறியுடன் காத்திருக்கின்றனர்.  45 நாட்களில் அரசு நிவாரணம் வழங்குவதற்கோ தெரு நாய்களை  கட்டுப்படுத்துவதற்கோ திட்டவட்ட மான நடவடிக்கையை அறிவிக்கா விட்டால், அனைத்து பகுதிகளிளும் விவசாயிகளை திரட்டி பெரும் போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.