திருப்பூர், நவ.23 - காங்கேயம் வட்டத்தில் தெரு நாய்களால் கடித்துக் கொல்லப் பட்ட கால்நடைகளுக்கு 45 நாட்க ளுக்குள் இழப்பீடு வழங்க காங்கே யம் வட்டாட்சியர் எழுத்துப்பூர்வ மாக உறுதியளித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் குறிப் பாக காங்கேயம் வட்டத்தில் தெரு நாய்கள் கடித்து விவசாயிகளின் வளர்ப்பு கால்நடைகள் உயிரி ழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. தெரு நாய்களால் கொல்லப்ப டும் கால்நடைகளுக்கு உடற்கூ றாய்வு செய்து சான்றிதழ் வழங்க வும், வழக்குப்பதிவு செய்து கால்ந டைகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின் றனர். தெரு நாய்களால் தொடர் இழப்புகளை சந்தித்து வரும் நிலை யில், அரசு நிர்வாக தரப்பில் தெளி வான அறிவிப்பு எதுவும் வராத தால், சனிக்கிழமையன்று காங்கே யத்தில் இருந்து புறப்பட்டு வந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் கால்நடைகளுடன் குடி யேறும் போராட்டம் நடத்தப் போவ தாக அறிவித்தனர். அதன்படி காங்கேயம் வீராணம் பாளையம் அருகே பகவதி பாளை யத்தில் கால்நடைகளுடன் விவசா யிகள் திரண்டனர். விவசாயிகள் குடியேறும் போராட்டம் நடத்துவ தாக அறிவித்ததை தொடர்ந்து காங் கேயத்திலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டனர்.பகவ திபாளையத்தில், வெள்ளக்கோ வில் பிஏபி கிளை கால்வாய் நீர் பாது காப்பு சங்க விவசாயிகள் மற்றும் கால்நடைகளை இழந்த விவசாயி கள் திரளாக கலந்து கொண்டனர். இவர்களுடன் அய்யனூரைச் சேர்ந்த பேபி என்ற பெண் கலந்து கொண்டார். சனியன்று காலை அவ ரது வீட்டில் பால் கறக்கச் சென்ற போது, இரண்டு ஆடுகள் மற்றும் கோழிகள் தெரு நாய்களால் கடித் துக் கொல்லப்பட்டு இருந்ததாக தெரிவித்த பேபி, இறந்த கோழி களை போராட்டம் நடைபெறும் இடத்தில் கிடத்தி இருந்தார். விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புறப் பட முயன்ற போது அவர்களை தடுத்து காவல்துறையினர் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இந்த பேச்சு வார்த்தையில், தெரு நாய்கள் கடித்ததால் உயி ரிழந்த கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், மற்றும் தெரு நாய்களால் தாக்குத லுக்குள்ளான கால்நடைகளுக் கும் இழப்பீடு பெற அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதாகவும் காங்கேயம் வட்டாட்சியர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். மேலும் 45 நாட்களுக்குள்ளாக இழப்பீடு தரப்படும் என்றும் இந்த உறுதி மொழியில் தெரிவித்திருந்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.