districts

img

பூசாரி நாயக்கர் குளத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை:

உடுமலை, டிச.28- ஆலாம்பாளையம் பூசாரி நாயக்கர் குளத் திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து முறை யாகத் தண்ணீரை திறந்து விட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயி கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். உடுமலை தாலுகா, ஆலாம்பாளை யத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பயன்படும் வகையிலும், கிராமங் களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில்  ஆண்டுக்கு இருமுறை திருமூர்த்தி அணை யில் இருந்து ஆலாம்பாளையம் பூசாரி நாயக் கர் குளத்திற்கு தண்ணீர் விடுவது வழக்கம்.  இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு  முன்பு திருமூர்த்தி அணைக்கு பிஏபி தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் வரும் காண்டூர் கால்வாய் வேலைகள் நடை பெற்றதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய  மழையில்லாத காரணத்தால் இக்குளத்திற்கு  தண்ணீர் விடவில்லை. தற்போது காண்டூர் கால்வாய் வேலைகள் முடித்து போதிய அளவு தண்ணீர் வரும் நிலையில், அணை யில் இருந்து நான்காம் பாசனத்திற்குப் பிற குளங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது. ஆனால் பூசாரி நாயக்கர் குளத்திற்கு தண் ணீர் விடாப்படாமல் உள்ளது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறு கையில், பூசாரி நாயக்கர் குளத்திற்கு  திரு மூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க  பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத் தோம். ஆனால், அதிகாரிகள் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்களில் வேலை நடப் பதாக, இல்லாத காரணத்தைச் சொல்லி வரு கிறார்கள். குளத்தில் தண்ணீர் இல்லாமல் போனதால் இப்பகுதியில்  நிலத்தடி நீர் மட்டம்  குறைத்து கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளன. இதனால், தண்ணீர் விலைக்கு வாங்கி கால் நடைகளுக்கு ஊற்றி வருகிறோம். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்கள் குளத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர வேண்டும் என கூறினர்.