districts

img

தடுப்பணையை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்

கோவை, அக்.31- ஆனைமலையை அடுத்த அங்கல குறிச்சியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த சேதமடைந்த தடுப்பணையை விவசாயிகள் நிதி திரட்டி சீரமைத்துள்ள னர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சி ஊராட்சி, நரி முடக்கு என்னும் மலையடிவார பகுதி யில் பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு அரசால் தடுப்பணை கட்டப்பட்டது.  இதனால் பருவமழை காலங்களில் தடுப் பணையில் தேங்கும் மழைநீரால், சுற்றி யுள்ள விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால், பராமரிப்பு இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக தடுப்பணை சிதிலமடைந்து வந்தது. இதனால் நீர் தேங்காமல் விவசாய நிலங்களில் உள்ள திறந்தவெளி கிணறு, ஆழ் குழாய் கிணறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறைந்தது. விவசாயம் பாதிக்கப்பட்ட தால், தடுப்பணையை சீரமைக்க தமிழ் நாடு அரசுக்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. இதைய டுத்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி சிதில மடைந்த தடுப்பணையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறுகையில், நிலத்தடி நீர் செறி வூட்டும் திட்டத்தில் பல இடங்களில் பண்ணை குட்டைகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பள்ளங்கள், சிற்றோடைகளில் வரும் மழைநீரை சேமித்து வைக்க மலையடி வாரம் முதல் பாலாறு வரை பல இடங் களில் தடுப்பணைகளை அரசு கட்டி யது. கடந்த சில ஆண்டுகளாக தடுப்ப ணைகள் பராமரிப்பு இன்றி சிதலம டைந்து வருகின்றன. குறிப்பாக, தடுப்ப ணைகளின் கற்கள் பெயர்ந்தும், சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்தும் நீர்கசிவு  ஏற்படுவதால் மழைநீரை சேமிக்க முடிய வில்லை. இதனால் நாங்களே சீர மைத்து வருகிறோம். இதேபோன்று பல  இடங்களில் பராமரிப்பின்றி உள்ள தடுப் பணைகளை சீரமைத்து தர அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.