திருப்பூர், ஏப்.27– திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திரு மூர்த்தி அணைகள் மற்றும் குளம், குட்டைக ளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க மூன்று மாத காலமாக கோரிக்கை விடுத்தும் அனுமதி தராமல் காலதாமதம் செய்வது ஏன் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப் பியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன் கிழமை விவசாயிகள் குறை தீர்க் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.குமார் ஆகியோர் கோரிக்கை மனு அளித்து கேள்வி எழுப்பினர். குறிப்பாக அருகாமை கோவை மாவட் டத்தில் 40 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மட்டும் மூன்று மாத காலமாக விவசாயி களுக்கு வண்டல் மண் மற்றும் கரிசல் மண் எடுக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், கேரளாவிற்கு சட்ட விரோதமாக தினமும் நூறு லாரிகளில் கிராவல் மண் கடத் தப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. இது எவ்வகை யிலும் நியாயமற்றது. எனவே விவசாயி களுக்கு மண் எடுக்க அனுமதி அளிக்க வேண் டும் என்று வலியுறுத்தினர்.
கோயில் நிலம் பொது ஏலம்
உடுமலை வட்டம், பெரியவாளவாடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவி லுக்குச் சொந்தமான 31 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் தரிசாக இருப்பதால் காட்டுப்பன் றிகள் அடைக்கலமாகி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலத்தை பொது ஏலம் விட்டு அதில் கிடைக் கும் வருவாயில் கோயில் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர். இது குறித்து பல முறை கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏழு அறங்காவலர் களில் ஐவர் மறைந்துவிட்டனர். மற்ற இருவ ரில் ஒருவர் மட்டுமே உள்ளூரில் உள்ளார். கோயில் நிலம் பராமரிப்பு இல்லாமல் தரிசாக இருக்கும் நிலையில் பொது ஏலம் விட வேண் டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வலியுறுத்தினர்.
வக்பு வாரிய நிலத் தடை
ஊத்துக்குளி வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட நிலங்களை வஃக்பு வாரிய நிலம் என்று கூறி ஊத்துக்குளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் உரிய பரிந்துரை அளித்து அந்த தடையை நீக்க வேண்டும் என்று அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்வோர் பாது காப்பு கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சங் கம் சார்பில் ஆர்.குமார் வலியுறுத்தினார்.
பெருமாநல்லூர் பேருந்து
விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன் றிய செயலாளர் எஸ்.அப்புசாமி அளித்த மனு வில், திருப்பூர் வடக்குப் பகுதியில் உள்ள பெருமாநல்லூரில் கோவை, ஈரோடு, சேலம் செல்லக்கூடிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஒரு சில வண்டிகளைத் தவிர பெரும்பாலான வாகனங்கள் நிறுத்தி பய ணிகளை ஏற்றி இறக்கிச் செல்வதில்லை. இத னால் வேலைக்குச் செல்வோர், கல்வி நிறுவ னங்களுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சுற்று வட்டாரத்தில் 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பல் லாயிரக்கணக்கான மக்கள் மேற்கண்ட ஊர்க ளுக்குச் செல்ல பெருமாநல்லூர் மையப்பகு தியாக இருப்பதால் அனைத்து பேருந்துக ளையும் இங்கே வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று ஆட்சியரிடம் கேட்டுக் கொண் டார். உடுமலைபேட்டையில் வேளாண் துறை அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியி யல் துறை அலுவலகத்திற்கு உரிய இடம் வழங்க வேண்டும். பொள்ளாச்சி போன்ற இடங்களில் வேளாண்மை சார்ந்த பல் வேறு துறை அலுவலகங்களும் ஒரே இடத் தில் செயல்படுகின்றன. அதுபோல் இங்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மது சூதனன் கேட்டுக் கொண்டார். ஊத்துக்குளி வட்டம், பு.தளவாய்பா ளையம் கிராமத்தில் அவிநாசி - அத்திக்கடவு திட்டக்குழாய் அமைக்கும்போது பழுதான தார்ச்சாலையை சீரமைத்துத் தரவும் விவ சாயிகள் சங்க ஊத்துக்குளி ஒன்றியச் செயலா ளர் எஸ்.கே.கொளந்தசாமி கேட்டுக் கொண் டார். மானியம் குறைப்பு? விவசாயிகளுக்கு மண்வெட்டி, கடப் பாறை, கொத்து, மண் வழிக்கும் சட்டி, கதிரறி வாள் போன்ற வேளாண்மை உபகரணங் களை கடந்த ஆண்டு 90 சதவிகிதம் மானியத் தில் வழங்கினர். ஆனால் இந்த ஆண்டு மானியம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள் ளதால் சிறு, குறு விவசாயிகள் மிகவும் பாதிக் கப்படுவார்கள். எனவே கடந்த ஆண்டைப் போல 90 சதவிகிதம் மானியத்தில் வழங்க வேண்டும் என்று மங்கலம் கிராம நீரினைப் பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சி.பொன்னுசாமி கேட்டுக் கொண் டார். அதேபோல் சொட்டு நீர் பாசனம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.1.13 லட்சம் மானியம் வழங்கப்பட்டாலும் தற்போது ஏறி யுள்ள விலைவாசி உயர்வினால் விவசாயி கள் ரூ.50 ஆயிரம் வரை கூடுதலாக செலவிட வேண்டிய நிலை உள்ளது. எனவே சொட்டு நீர் பாசன மானியத்தையும் உயர்த்தி வழங் குமாறு சி.பொன்னுசாமி கேட்டுக் கொண் டார்.