districts

img

ஒன்றிய பட்ஜெட் நகலை கிழித்து விவசாயிகள் போராட்டம்

சேலம், பிப்.5- விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை கிழித்து, விவசாயிகள் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய நிதி அமைச்சகம் சார் பில், அண்மையில் தாக்கல் செய் யப்பட்ட பட்ஜெட் என்பது முற்றி லும் விவசாயிகள், மக்கள் விரோத மாகும். விவசாயிகளுக்கு எந்த வொரு அடிப்படை முகாத்திரமும் இல்லாத பட்ஜெட்டாக வெளியிடப் பட்டுள்ளது. கடன் தள்ளுபடி, உர  மானியம் குறைப்பு, மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட் டத்திற்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட  எந்த அறிவிப்பும் இல்லை. விவசா யிகள் மற்றும் பொதுமக்களை வஞ் சிக்கும் வகையில் தாக்கல் செய் யப்பட்ட பட்ஜெட்டின் நகலை கிழித்து, ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில் புதனன்று போராட் டம் நடைபெற்றது. சேலம் மாவட் டம், அயோத்தியாபட்டணம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஏஐகேஎம் மாவட்டச் செயலா ளர் வி.அய்யந்துரை தலைமை வகித்தார். இதில் ஐக்கிய விவசா யிகள் முன்னணியின் ஒருங் கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி, உறுப்பினர் வி.சந்திரமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செய லாளர் என்.கே.செல்வராஜ், துணைத்தலைவர் பி.தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி ஒன்றியத்தில் பல இடங்க ளில் ஐக்கிய விவசாயிகள் முன் னணி சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு  போராட்டம் நடைபெற்றது. அதே போல, மார்க்சிஸ்ட் கட்சியின் சார் பில், வெப்படை நான்கு சாலையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஒன்றியக்குழு உறுப்பினர் என். மெய்நாதன் தலைமையில் நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. பெருமாள், ஒன்றியச் செயலாளர் எஸ்.சந்திரமதி உட்பட பலர் கலந்து  கொண்டனர். பல்லாக்காபாளை யத்தில் அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின்  மாவட்டத் தலைவர் சி.துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சிபிஎம் நகரச் செய லாளர் சி.சண்முகம் தலைமை வகித் தார். இதில் வடக்கு ஒன்றியச் செய லாளர் அறிவுடையநம்பி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கோ.செல் வராசு, பி.ராணி உட்பட பலர்  கலந்து கொண்டனர். மல்லசமுத்தி ரம் ஒன்றியம், வையப்பமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள் தலைமை வகித் தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.தமிழ்மணி, சு. சுரேஷ், ஒன்றியச் செயலாளர் தேவ ராஜ், ஏளூர் முன்னாள் வார்டு உறுப் பினர் ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி ஒன்றிய அரசின் மக்கள் விரோத  பட்ஜெட்டை கண்டித்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரும புரி மாவட்டம், நல்லம்பள்ளி இந்தி யன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. எல்லப்பன் உட்பட திரளானோர் பங் கேற்றனர். கோவை ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து, புத னன்று கோவை மேட்டுப்பாளை யம் சாலையில் உள்ள பிஎஸ் என்எல் தலைமை பொது மேலா ளர் அலுவலகம் முன்பு பிஎஸ் என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்ட அமைப்பு செயலா ளர் ஏ.எஸ். சரவணகுமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செள.மகேஸ்வரன், மாநில துணைத்தலைவர் சி.சசிகுமார், மாவட்டச் பொருளாளர் ஏ.எஸ். ஷாகுல் அகமது, பிஎஸ்என்எல் ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ஒய்.அப்துல் முத்தலிப்பு ஆகியோர் உரையாற்றினர். முடி வில், வி.சரவணகுமார் நன்றி கூறி னார் இதில், திரளான பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி யில் சிபிஎம் வட்டாரச் செயலாளர் டி. சுப்பிரமணி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் ஏ.பி.ராஜூ ஆகியோர் பங் கேற்றனர். பவானி புதிய பேருந்து  நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாலுகா செயலா ளர் ஆர்.பிரகாஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.மாணிக்கம், ஆர்.முருகேசன், ஏ.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.