உடுமலை, செப்.4- நில அளவீடு செய்ய காலம் தாழ்த்தும் சர்வே துறையின் நடவ டிக்கையை கண்டித்து. உடுமலை வட்டாச்சியர் அலுவலகத்தை புத னன்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை யின் கீழ் சர்வே துறை செயல்படு கிறது. இங்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களுடைய நிலங் களை அளவீடு செய்ய முறையாக ஆன்லைன் விண்ணப்பம் செய் கின்றனர். ஆனாலும் வரிசைப்படி விண்ணப்பங்களை ஏற்காமல், தங்க ளுக்கு பிடித்த நபர்களுக்கு முன்னு ரிமை கொடுக்கின்றனர். உடுமலை சர்வே துறையில் தொடர் புகார் தெரி வித்தோம். நிலங்களை அளவீடு செய்தா லும், நில அளவு செய்த விவசாய நிலத்தை உட்பிரிவு செய்யாமல் திட்டம் மிட்டு காலம் தாழ்த்தி வரு கிறார்கள். ஆனால் வீட்டு மனை களை பிரிக்கும் விவசாய நிலங்க ளுக்கு, உடனடியாக சென்று அள வீடு மற்றும் அனைத்து ஆவணங் களையும்சர்வே துறை அதிகாரி கள் உடனடியாக செய்து தருகின்ற னர். ஆனால், பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்களை அள வீடு செய்ய காலம் தாழ்த்தி வரு கின்றனர். உடுமலை வட்டாட்சியரி டம் பலமுறை புகார் தெரிவித்தும் உடுமலை வருவாய் கோட்டாட்சி யர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் தெரி வித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. எனவே, பாதிக்கப் பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் தங்களின் நிலங்களை அள வீடு செய்யும் வரை உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தை முற்று கையிடுவது என முடிவெடுத்து அமர்ந்துள்ளோம், என்றனர். இப்போராட்டத்தை தொடர்ந்து, வட்டாச்சியர் சுந்தரம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இதில், மானுபட்டி கிராம நத்தம் பகுதியல் மறு அளவீடு செய்யப்படும் என் றும், வரும் 11 ஆம் தேதிக்குள் விவசாயிகள் கூறிய விளைநிலங் கள் மற்றும் அரசு நிலங்கள் முறை யாக அளவீடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனை வரும் கலைந்து சென்றனர்.