districts

img

கல்குவாரியை எதிர்த்து போராட்டம்: விவசாயிகள் கைது

நாமக்கல், ஜூலை 6- தனியார் கல்குவாரி இயங்குவதை தடை செய்ய  வேண்டும் என போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், எலச் சிபாளையம் அருகே கோக் கலை ஊராட்சி எளையாம்பாளையத்தில் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங் குவதை தடை செய்ய வலியுறுத்தி, சனி யன்று  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் இதே பகுதியில் ஒரு பகுதியி னர் குவாரியை மூடக்கூடாது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று போராட்டம் நடத் தினர். இந்நிலையில் அசம்பாவித சம்பவங் களை தவிர்க்கும் பொருட்டு காவல் துணை  கண்காணிப்பாளர் பொருப்பு வின்சென்ட், திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த் தலைமையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், போராட்டம் நடத்துவதற்கு அனு மதி கிடையாது என்று போராட்ட பந்தலில் வந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதனை ஏற்காத விவசாயிகள், கல்குவா ரியை தடை செய்யும் வரையில் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என உறுதி பட தெரிவித்தனர். இதனையடுத்து, 35 ஆண் கள், 27 பெண்கள் உட்பட 62 பேரை போலீ சார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனி யார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் கார ணமாக இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.