நாமக்கல், செப்.2- நாமக்கல்லில் சிப்காட் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று கூறி, மாவட்ட நீதிபதியிடம் விவசாயிகள் மனு அளித்த னர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி பகுதியில், தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஒன்றிணைந்த சிப்காட் எதிர்ப்புக்குழுவினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று மாவட்ட நீதி பதியை சந்தித்து சிப்காட் அமைக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி, உயர்நீதிமன்றத்திற்கு மனுவை பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார். முன்னதாக, நீதி மன்றத்தில் மனு அளிக்க வந்த 100க்கும் மேற்பட்ட விவசாயி களை, அங்கிருந்த ஏராளமான போலீசார் தடுத்து நிறுத்திய தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.