கோபி,மார்ச் 12- மஞ்சள் சாகுபடி அதிகரித்து வரும் நிலையில், மஞ்சளுக்கான எதிர்பார்த்த விலை இல்லை என்ப தால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி சுற்று வட்டார பகுதிகளான பாரியூர், நஞ்சை கோபி, வெள்ளாளபாளை யம், புதுக்கரைபுதூர், கூகலூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்ப ளவில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மஞ்ச ளுக்கு போதிய விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடி குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந் தாண்டு மஞ்சள் சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் நான்கு ஏக்கர் சாகுபடி செய்து வந்த, விவசாயிகள் நடப்பாண்டில் ஒன்று, இரண்டு ஏக்கர் மட்டுமே மஞ்சள் சாகுபடியை தொடங்கி மஞ்சள் சாகு படிக்கான உழவுப்பணி, விதை மஞ் சள், உரம், மருந்து தெளித்தல் என முதலீடு செலவு செய்து மஞ்சள் சாகு படியை தொடங்கினர். இதில், சாகுபடியை தொடங்கிய சில மாதங்களிலே போதிய மழை இல்லை, அதிக வெப்பம் காணப்படு கிறது. இதனால் மஞ்சள் பயிரில் சரியான விளைச்சலின்றி காணப் பட்ட மஞ்சள் தற்போது அறுவ டைக்கு தயாராகி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகி றது. மேலும், 10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால், தற்போது மஞ்சள் அறுவடையில் எதிர்பார்த்த விளைச் சலின்றி மகசூல் குறைந்துள்ளது. மஞ்சள் சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.19 ஆயிரம் வரை விற்பனையா கிறது. எனவே வரும் நாட்களில் மஞ்ச ளுக்கு இன்னும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், மஞ்சள் விலை உயர்ந்தால் மட்டுமே மஞ்சள் சாகுபடியின் முதலீட்டு செலவுக்கு ஈடுசெய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள். தற்போதைய சூழலில் மஞ்சள் விலை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் மஞ்சள் அறுவடை நடைபெற்று வரும் நிலை யில் மஞ்சளுக்கான எதிர்பார்த்த விலை இல்லை என்பதால் விவசா யிகள் கவலை தெரிவித்தனர்.