உடுமலை, டிச.30- உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டு பிழி திறன் 10 சதவிகிதம் என்ற இலக்கை அடைய முறையான பராமரிப்பு வேலைகளை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் 1960 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்முறையாக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா, கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை சுமார் 1250 டன் அறவை திறன் கொண்டு துவங்கப்பட் டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நல்ல லாபத்தில் இயக்கி வந்த ஆலையில் இயத்திரத்தில் புதுமைகளை கொண்டு வரமால் பழைய இயந்திரங்களை கொண்டு இயக்குவதால் தற்பொழுது தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் பணம் தரமுடியாத நிலையில் இயங்கி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், கடந்த 60 வருடங்களாக ஆலையில் இருக்கும் இயந்திரங் கள் புதுமைப்படுத்தாமல் உள்ளது. இதனால் கடந்தாண்டு இயந்திரங்கள் பழுதானதால், ஆலையின் மொத்த பிழி திறன் 7.8 சதவிகிதமாக குறைந்தது. இந்த ஆலையில் தான் முன்பு 10 சதவிகிதம் பிழி திறன் இருந்தது. எனவே, ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் வகையில், உடனடியாக ஆலை யில் பராமரிப்பு பணிகளை துவங்க வேண்டும். விளைநிலங்க ளில் கரும்புகளை வெட்ட சம அளவு கூலியை ஆலை நிர்வா கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள னர்.