உடுமலை, ஜன.6- வன விலங்குகள் விளைநிலங் களைச் சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் மலை அடிவாரங்களில் வனத்துறையினர் சூரியசக்தி மின் வேலி அமைக்க வேண்டும் என வெள் ளியன்று உடுமலை மாவட்ட வன அலுவ லகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து 40 கிலோ மீட் டருக்கு தொலைவில் இருக்கும் குடிமங் கலம் ஒன்றிய பகுதிகள் வரை காட்டு யானை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகி றது. சில சமயங்களில் காட்டுப் பன்றிகள் விவசாயிகளையும் தாக்குகிறது. வனவி லங்குகளால் சேதம் அடையும் பயிர்க ளுக்கும், தாக்குதலுக்கு உள்ளாகும் மனிதர்களுக்கும் இழப்பீடுகள் வழங் கப் பல கட்டுப்பாடுகள் உள்ளன. மலை அடி வாரப்பகுதிகளான திருமூர்த்திந கர், வளையபாளையம், தேவனூர்பு தூர், அருத்தனாரி பாளையம், ராவணா புரம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை எல்லை வரை சூரியசக்தி மின் வேலி அமைக்க வேண்டும். மலை அடிவாரப்ப குதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அகலி அமைக்க வேண்டும். காண்டூர் கால்வாய் சூப்பர் பேஸேஜ்க ளில் காட்டு விலங்குகள் வராத வகை யில் தடுப்புகள் அமைக்க வேண்டும். பொன்னாலம்மன் சோலை கோவில் அருகில் வனத்துறை இடத்தில் மழை நீர் சேகரிக்கும் வகையில் தடுப்பணை கட்ட வனத்துறை அனுமதி தர வேண் டும். விவசாயிகளுக்கு தீராத பிரச்சனை யாக காட்டு விலங்குகள் ஒருபுறம் இருந் தாலும், மறுபுறம் விளைநிலங்களையும் வீடுகளையும் நாசப்படுத்தும் குரங்குக ளை கூண்டுகள் வைத்து விரட்ட வேண் டும் என்று கோரிக்கை வைத்தார்கள். மேலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயகுறை தீர்ப்பு கூட்டம் நடத்துவது போல் வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் தலை மையில் விவசாயிகள் கலத்து கொள் ளும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா விடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள்.