உடுமலை, செப். 22 - உடுமலை மற்றும் மடத்துக்கு ளம் பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயி கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவ சாயிகள் கோரிக்கை வைத்தனர். உடுமலை வருவாய் கோட்டாட்சி யர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை யில் கோட்ட அளவிலான விவசாயி கள் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த கூட் டத்தில் உடுமலை மற்றும் மடத்துக் குளம் வட்டாட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், பருவ மழை இல்லாமல் போனதால் தென்னை உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து போயுள்ளன. எனவே இப்பகுதியை வறட்சி பகு தியாக அரசு அறிவிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரினர். மேலும் விவசாயிகள் பேசுகையில், குடிமங்க லம் பகுதிகளில், மின்வாரியத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையாக உள் ளதால், மின்தடை ஏற்பட்டால், சரி செய்து இணைப்பு வழங்க பல மணி நேரம் ஆகிறது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர். இதனை சரி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். வறட்சி யால் பாதிக்கப்பட்ட தென்னை விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தென்னை விவசாயத் தில், தேங்காய் விலை குறைந்து வரு வதால் விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். ஆதனால் விலை வீழ்ச் சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்கனூத்து பகுதி மக்கள் பயன் படுத்தி வந்த வழித்தடத்தில் உள்ள ஓடையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செக் டேம் கட்டப்பட்டது. இத னால் அப்பாதையை மக்கள் பயன்ப டுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே அங்கு பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தில் வேளாண் உரங்களை இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க, மாவட்ட ஆட்சியரிடம், விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் தாலுக் காவை, வறட்சி தாலுக்காவாக அறி விக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை போதிய அளவு பெய் யாத நிலையில், தென்னை காயும் நிலையில் உள்ளது. மேலும் வாடல் நோயால் பாதிப்படைந்த தென்னை மரங்கள் பட்டுப்போய்விடுகின்றன. புதிய மரங்கள் நடுவதற்கு மத்திய அரசு ஆர்.என்.ஆர். திட்டத்தில் நிவாரணம் பெற்று தர வேண்டும். கடு மையான வறட்சி நிலவும் நிலையில், ஒன்றியப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றனர்.
தக்காளி சந்தைக்கு இடவசதி
உடுமலை, கிணத்துக்கடவு பகுதி களில் தக்காளி சாகுபடி பிரதான தொழிலாக உள்ள நிலையில், உடு மலை சந்தையில் தக்காளி சந்தைக்கு இட நெருக்கடியாக உள்ளது. விவசா யிகள் விளைபொருட்களை எளிதாக கொண்டு வந்து விற்பனை செய்யும் வகையில் இட நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். உடுமலை மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளான பொன் னாலம்மன் சோலை, திருமூர்த்தி மலை, ஜல்லிபட்டி கொங்குரார் குட்டை பகுதிகளில், வனவிலங்கு கள் விளைநிலங்களுக்கு வருவதை தடுக்க, வனத்துறை சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. தற் போது சிதலமடைந்த நிலையில் உள்ள கம்பி வேலிகளை சரி செய்ய வேண்டும். வனவிலங்குகளால், பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
அமராவதி சர்க்கரை ஆலை
உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டு 42 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப் பட்டு, ரூபாய் 17 கோடி பணம் கரும்பு விவசாயிகளுக்கு பணம் வழங்கப் பட்டுள்ளது. வரும் ஆண்டிற்கு 532 கரும்பு விவசாயிகள் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலங்களில் கரும்பு பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை முழுவதுமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமராவதி அணையி லிருந்து உயிர் தண்ணீர் வழங்க வேண்டும். கால்நடைத்துறை சார் பில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் கோமாரி தடுப்பூசி போடப் படும். ஆனால் இந்த ஆண்டு இது வரை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஊராட்சி பகுதிகளில் நடை பெறும் பணிகளில் தரம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி காலங்களில், கால்நடை துறை சார்பில், மாட்டுத்தீவனங் களை கால்நடை வளர்ப்பவர்க ளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை கொள்முதல் கடந்த 2014 ஆம் ஆண்டு 900 கிலோ என்ற நிலையில் இருந்தது. ஆனால் நடப்பாண்டு ஒரே முறை மட்டும் 200 கிலோ கொள்முதல் செய்யப்படுகி றது. கொள்முதலை உயர்த்த வேண் டும். உடுமலை ஒழுங்குமுறை விற் பனை கூடத்தில், கொள்முதல் செய்த கொப்பரை விவசாயிகள் 14, பேருக்கு 160 நாட்களாக பணம் வழங் கப்படவில்லை. உடனடியாக விவசா யிகளுக்கு பணம் வழங்க வேண்டும். கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்ப டும் மனுக்களுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன் றிய அலுவலகத்திற்கு விவசாயிகள் வழங்கும் மனுக்களுக்கு பதிலும் இல்லை, தீர்வும் இல்லை எனவே உரிய தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். கோட்டாட்சியர் பேசுகையில், தற் போது பெறப்படும் மனுக்களை தீர்வு காணும் வகையில் விரைந்து அனைத்து துறைகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.ஆர். மதுசூதனன், மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, உடுக் கம்பாளையம் பரமசிவம், ராஜகோ பால், தென்னை விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் அருண்பி ரசாத், குடிமங்கலம் தமிழ்நாடு விவ சாய சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் ஸ்ரீதர் மற்றும் ஜல்லிபட்டி கோபால், வரதராஜன், விஜயசேக ரன், மௌனகுருசாமி உள்ளிட்ட விவ சாயிகள் கலந்து கொண்டனர்.