districts

img

மக்காச்சோளம் விளைச்சல் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, பிப்.8- படைப்புழு தாக்குதல், நீர்ப்  பற்றாக்குறை, மகசூல் பாதிப்பு, விலை சரிவு ஆகியவையால் மக் காச்சோள விவசாயம் செய்த விவ சாயிகள் தற்பொழுது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலும், உடு மலைப்பேட்டை சுற்று வட்டாரத் திலும் விவசாயிகளின் முக்கிய சாகு படி பயிராக திகழ்வது மக்காச்சோ ளம். கோழி மற்றும் மாட்டுத் தீவனங் களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து தீவனங்கள் தயாரிக்கும் முக்கிய மூலப்பொருளான மக் காச்சோளத்தின் தேவையும் கடந்து  சில ஆண்டுகளாக அதிகரித்துள் ளது. உடுமலை சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆண் டுக்கு ஒரு முறையாவது மக்காச் சோளப் பயிரைச் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற் பொழுது ஆயிரக்கணக்கான ஏக்க ரில் மக்காச்சோளம் சாகுபடி செய் யப்பட்டு, அறுவடை நடைபெற்று வருகிறது.  கடந்த மாதம் 100 கிலோ  மூட்டை 2500 ரூபாய்க்கு விற்பனை யானது. ஆனால் அறுவடை துவங் கிய பிறகு 200 முதல் 300 ரூபாய் வரை  மூட்டைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட் டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்  பெய்த பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் போதிய நீர் கிடைக்கவில்லை. மேலும், படைப்புழுவின் தாக்கு தல் அதிகரித்து பயிர்கள் பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கூடுத லாக மருந்துகள் அடிக்கப்பட்டு,  புழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்த புழுக்களின்  பாதிப்பு தற்பொழுது அறுவடை யில் எதிரொலித்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு 35 மூட்டை விளைச்சல் தர வேண்டிய மக்காச்சோளம், தற் பொழுது 18 முதல் 20 மூட்டை வரை  மட்டுமே விளைந்துள்ளது. மேலும்  மக்காச்சோள கருதுகள் அனைத் தும் சுருங்கியும் சிறுத்தும் போய் விட்டது. இதனால் பல்வேறு இன் னல்களை மக்காச்சோள விவசா யிகள் சந்தித்து வருகின்றனர். முத லில் படைப்புழு தாக்குதல், இரண் டாவது நீர் பற்றாக்குறை, மூன்றா வது மகசூல் பாதிப்பு, நான்கா வது விலை சரிவு என நான்கு திசை யிலும் மக்காச்சோள விவசாயிகள் இந்த ஆண்டு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அல்லது உதவித் தொகையை வழங்க வேண்டும் என இப்பகுதி மக்காச்சோள விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.