districts

வனவிலங்குகளால் உயிர் மற்றும் பயிர் சேதம் தமிழக அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 26 - தமிழகத்தில் மலை மற்றும் வனப் பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் வன விலங்குகளால் பயிர் சேதம்  மற்றும் உயிர் சேதத்தைச் சந்திக்கின் றனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு  வழங்குவதுடன், வன விலங்குகளை விளைநிலங்களில் வராமல் தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் தலைமையில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தை முறைப் படுத்தி நடத்த வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப் பட்டது. திருப்பூர் மாவட்ட விவசாயி கள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டச் செயலாளர் ஆர்.குமார்,  மாவட்டப் பொருளாளர் அ.பாலதண்ட பாணி, திருப்பூர் வடக்கு ஒன்றியச்  செயலாளர் எஸ்.அப்புசாமி ஆகி யோர் உரையாற்றினர். அப்போது அவர்கள்  கூறுகை யில், கோவை, திருப்பூர், ஈரோடு உள் ளிட்ட மாவட்டங்களில் மலைகள் மற் றும் வன ஓரங்களில் பட்டா மற்றும் அர சின் புறம்போக்கு நிலங்களில் விவசா யிகள் பயிர் செய்து ஜீவனம் செய்து  வருகின்றனர். இந்த நிலங்களில் காட் டுப்பன்றி, மயில், யானை, குரங்கு போன்ற வன உயிரினங்களால் பயிர்  சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின் றன. ஒரு சில பகுதிகளில் மனித உயிர்  சேதமும், பொருட்கள், உடமை கள் சேதமும் ஏற்பட்டு வருகிறது.  வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ல் இந்திய அரசாங்கம் கொண்டு வந்து அது 2023 ஏப்ரலில் தான் பாராளுமன்றத்தில் திருத்த சட் டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, வன எல்லைகள் குறித்தோ அல்லது வன உயிரின சரணாலயங்கள் குறித்தோ மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளவும் வழி வகை செய்கிறது. அதேபோல், பயிர்  நஷ்டம், உயிர் சேதம் இது போன்ற  வனவிலங்குகளால் ஏற்படும் இழப் பிற்கு மாநில அரசு உரிய இழப் பீட்டை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பதை கேரள போன்ற மாநில அர சுகள் நடைமுறைப்படுத்தி வரு கின்றன. கேரளத்தில் பயிர்களைச்  சேதம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்கியதை போல இங்கும் செயல்படுத்த ஆணை பிறப்பிக்க வேண்டும். வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிரி ழப்புக்கு ரு.25 லட்சம் மற்றும் சேதார மாகும் பயிர்களுக்கு முழு இழப்பீடு  வழங்க வேண்டும் என கேட்டுக்  கொண்டனர். பல்லடம் ஒன்றியச் செய லாளர் பழனிசாமி, உடுமலை ஒன்றிய  தலைவர் ராஜகோபால், மடத்துக்கு ளம் ஒன்றியப் பொருளாளர் வெள் ளிங்கிரி ஆகியோரும் கலந்து கொண் டனர். மேலும் அமராவதி ஆற்றில் தண் ணீ;ர் திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் வரு வாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருப் பூர் தெற்கு, ஊத்துக்குளி, திருப்பூர் வடக்கு, அவினாசி தாலுகா பகுதி களிலும் உள்ள விவசாய தோட்டங்க ளில் மானாவாரி காடுகளிலும் விவசா யிகள் சோளம், நிலக்கடலை, நெற்ப யிர், தட்டபயிர், பச்சபயிர், அவரை உள்ளிட்டவைகள் பயிரிடுவது வழக் கம். இந்த விவசாயிகளுக்கு 50 சதவீத  மானியத்தில் விதைகளை வழங்க  வேண்டும். குண்டடம் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட சடையபாளையம் ஊராட்சி பேட்டை காளிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து மேற்கே செல்லும் வண்டிப்பாதை தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட் டத்தில் மெட்டல் சாலையாக மாற்றம்  செய்ய வேண்டும். குடிமங்கலம் வட் டாரம் குப்பம்பாளையம் ஊராட் சிக்கு கூடுதலாக 2 வெங்காய பட் டறை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குப்பம்பாளையம் மற் றும் ஆமந்தகடவு கிராமங்களில் அதிக அளவு வெங்காயம் சாகு படி செய்கிறார்கள். எனவே இது  தொடர்பாக நடவடிக்கை எடுக்க  வேண்டும். 2 வது மண்டலத்திற்கு பாசன நீர் திறப்பதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்போது விவ சாய சங்கங்களையும் ஆலோசனை செய்ய வேண்டும். தாராபுரம் காய்கறி தினசரி சந் தையில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய இடம் வழங்க வேண்டும். தாராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு பி.ஏ.பி. தொகுப்பில் இருந்து பாசன பகு திக்கு தண்ணீர் திறக்கும் முன்பு உயிர்  தண்ணீர் வழங்க வேண்டும். தாராபு ரம் வட்டம் மாம்பாடி பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்த மான அமராவதி ஆற்றில் கம்பிளியம் பட்டி பகுதியில் சட்டத்திற்கு புறம் பாக விவசாய மின் மோட்டாரை  வைத்து இரவு நேரங்களில் தண்ணீர்  விற்பனை செய்கிறார்கள். எனவே தண்ணீர் திருட்டில் ஈடுபடுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பிரிவிற்கு தேவை யான அலுவலர்கள் மற்றும் களப்ப ணியாளர்களை அமர்த்திட தகுந்த ஆவண செய்ய வேண்டும் என்று விவ சாயிகள் கேட்டுக் கொண்டனர்.  அலகுமலை ஊராட்சி ராமம்பா ளையம் பகுதி மக்கள் ஆட்சியரிடம்  அளித்த மனுவில், எங்களது பகு தியில் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு 110  மீட்டர் தொலைவில் அலகுமலை யில் 81 சென்ட் உள்ள விவசாய நிலத் திற்கு உகாயனுர் காட்டுப்பாளை யத்தை சேர்ந்த சிலர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் கொண்டு  செல்லப்படுகிறது. ஊராட்சி மற்றும்  மாவட்ட நிர்வாகத்திடம் எந்த அனும தியும் பெறாமல் 2 பைப் லைன்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல் லப்படுகிறது. இதனால் எங்கள் 250  குடும்பங்களுக்கு குடிநீர் கிடைப் பதை உறுதி செய்ய வேண்டும். ஆழ் குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு  வழங்க கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.