உடுமலை, செப்.4- விவசாயிகளை தண்ணீர் திரு டர்கள் என்ற பார்வையில் தொடர் செய்தி வெளியிடும் தினமலர் நாளி தழுக்கு பாசன சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பரம்பிக்குளம் - ஆழியாறு பாச னத் திட்டம் (பிஏபி) திருமூர்த்தி அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், உடுமலை நக ராட்சி, உடுமலை, குடிமங்கலம், மடத் துக்குளம் ஒன்றியப் பகுதி கிராமங் களுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசன நிலங்கள் நான்கு மண்டல மாக பிரித்து, சுழற்சி முறையில் தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இத னையடுத்து, இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க விவசாயி களின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 18 ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கபட்டது. இந்நிலையில், இரண்டாம் மண் டல பாசனத்துக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல், வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளிவிட்டு, நான்கு சுற்று கள் அடிப்படையில் , 8 ஆயிரம் மில் லியன் கன அடி நீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இரண்டாம் மண் டல பாசனத்திற்கு தண்ணீர் திறப் பால், திருப்பூர், கோவை மாவட் டத்திலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதே போல், பாலாறு படுகை, பழைய ஆயக்கட்டு தளி கால்வாய், ஏழு குழு பாசனத்திலுள்ள 2 ஆயி ரத்து 786 ஏக்கர் நிலங்களுக்கு, 18 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31 ஆம் தேதி வரை குறிப்பிட்ட இடைவெளியில், 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கவும் அரசு உத்தரவின் படி தண்ணீர் திறக்கப் பட்டது. பொதுப்பணித்துறையில் போதிய ஆட்கள் பற்றாக்குறையா லும், முறையாக கால்வாய்களை பரமரிப்பு மற்றும் கிளை வாய்கால் களை சுத்தம் செய்யாத காரணத் தால், திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கபட்ட நாள் முதல் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப் பட்ட சில நாட்கள் செல்லவில்லை. விவசாயிகளுக்கு தண்ணீர் செல் லாததற்கு பொது பணித்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை முழு மையான காரணமாக உள்ளது. விவசாயிகளுக்கு முறையாக தண் ணீர் கிடைக்க பிரதான கால்வாய் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கு விவசாயிகளால் தேர்வு செய்யப் பட்ட பாசனத் தலைவர்கள் முறை யாக தண்ணீரை பகிர்ந்து வருகி றார்கள். இந்நிலையில், தண்ணீர் விளை நிலங்களுக்கு செல்லாமல் இருப்ப தற்கு ஊழியர் பற்றாக்குறையை மறைக்கும் வகையில் விவசாயி களே தண்ணீரை திருடுகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தொடர்த்து செய்தியாக உடுமலை தினமலர் செய்தி வெளி யிட்டு வருவதாக மருள்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தின் தலைவர் பாலதண்டபாணி குற் றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கடந்த மாதம் இரண்டாம் மண் டல பாசனத்திற்கு திறக்கபட்ட தண் ணீர் மருள்பட்டி பாசன சபைக்கு உட்பட்ட சாலரப்பட்டி, போத்த நாயக்கனூர், மருள்பட்டி மற்றும் கருப்பட்டிபாளையம் பகுதியில் சுமார் 1300 ஏக்கர் விளைநிலங்கள் இரண்டாம் மண்டல பாசன திட்டத் தின் கீழ் பயன்பெறுகிறது. இந்நிலையில், தண்ணீர் திறக் கப்பட்ட நாளில் இப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக விளை நிலங்களுக்கு தண்ணீர் தேவை யில்லாத காரணத்தால் கிளை வாய்க் கால் பகுதியில் சென்ற தண்ணீர் குளத்திற்கு சென்றது. ஆனால் பாசன விவசாயிகளுக்கு தெரியா மல் குளத்திற்கு தண்ணீர் எடுப்ப தாகவும் இதற்கு அரசியல் தலை யீடு உள்ளதாக கடந்த 26 ஆம் தேதி தினமலர் செய்தி வெளியிட்டு இருந்ததை கண்டு, சம்மந்தப்பட்ட செய்தி நிருபரிடம் மறுப்பு தெரி வித்து இருந்தோம். ஆனால், எங் கள் பகுதி விவசாயிகள் யாரும் புகார் தெரிவிக்காத நிலையில், மீண்டும் கடந்த 3 ஆம் தேதி மீண்டும் மருள் பட்டி பாசன சபையில் விவசாயி களுக்கு தெரியாமல் அரசியல் வாதிகளை வைத்துக்கொண்டு தண் ணீர் எடுப்பதை கண்டித்து போராட் டங்கள் நடைபெறுவதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 21 ஆண்டுகலாமாக மருள்பட்டி கிராம நீரினை பயன் படுத்துவோர் சங்கத்தின் தலைவ ராக அனைத்து விவசாயிகளுக்கும் முறையாக தண்ணீர் பகிர்ந்து தரப் பட்டு உள்ளது. மேலும் இப்பகுதி விசாயிகள் மற்றும் பொது மக்களின் பிரச்சணைகளை தீர்க்கும் வகை யில் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வரும் நிலை யில் இப்பகுதி விவசாயிகள் தண் ணீர் குறித்து எவ்வித புகார் தெரி விக்காத நிலையில் உண்மைக்கு புறம்பான செய்தியை உடுமலை யில் வெளியிடுவதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. கடந்த வாரம் குடிமங்கலம் ஒன் றியத்தில் விவசாயிகளுக்கு பிஏபி தண்ணீர் முறையாக கிடைக்க வில்லை என்று உடுமலை பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளதை மருள்பட்டி பகுதி விவ சாயிகள் போராட்டம் நடத்தியா தாகவும் இதில் அரசியல் தலையீடு என்ற செய்தி யாரை மகிழ்விக்க என்று தெரியவில்லை என தெரி வித்துள்ளார்.