பள்ளிபாளையம், பிப்.11- விவசாயிகளின் நலன் சார்ந்து இல்லாத ஒன்றிய பட்ஜெட்டை நகலை எரிக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தி னர் ஈடுபட்டனர். கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ரூ.ஒரு லட்சம் கோடியாக குறைப்பு, விவசாயிகளின் உர மானியம் ரூ.50 ஆயிரம் கோடியாக குறைப்பு, பிஎம்.கிசான் திட்டத்தி லிருந்து 8 கோடி விவசாயிகள் வெளியேற்றம், விவசாயம் சார்ந்த துறைகளுக்கு 5.81 விழுக் காட்டிலிருந்து 5.29 விடுக்காடு ஆக குறைக் கப்பட்டது. இது கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வான, விவசாயிகளின் நலன் சார்ந்து இல் லாத ஒன்றிய பட்ஜெட் நகல் எரிக்கும் போராட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 70 மையங் களில் ஒன்றிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் ஒன்றி யம், படைவீடு கிராமத்தில் நடைபெற்ற போராட்டத்தில், விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பி.பெருமாள், நாமகிரிபேட்டை ஒன்றியத்தில் சின்னுசாமி, புதுசத்திரம் ஒன் றியத்தில் ஜோதி, முத்துகாப்பட்டியில் சதா சிவம், திருச்செங்கோட்டில் ஏ.ஆதிநாரா யணன், எருமப்பட்டியில் ஒன்றிய தலைவர் மு.து.செல்வராஜ் ஆகியோர் தலைமை யேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், விவசாயிகள் சங்கத்தினர், விவசாயதொழி லாளர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற் றனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் கே.கோவிந்தசாமி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர். அரூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்ட தலைவர் ஏ.நேரு, விவசாய தொழி லாளர் சங்க வட்ட தலைவர் குமரேசன் ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன், கரும்பு வெட் டும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் இ.கே.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று கிளானூர், கையலாயபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, மெணசி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. இதில், விதொச மாவட்ட செயலாளர் எம்.முத்து, விச மாவட்ட பொரு ளாளர் சி.வஞ்சி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். பென்னாகரம், மடம் கிராமத்தில் நடை பெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆ.ஜீவானந் தம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட தலைவர் எம்.குமார், விதொச மாவட்ட பொரு ளாளர் எம்.சிவா ஆகியோர் கலந்து கொண் டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடை பெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சாவித்ரி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் ஏ.கே.பழனிசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், விதொச மாவட்ட தலைவர் கே.ஆர்.விஜயராகவன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று நசியனூரில் நடைபெற்ற போராட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பா.லலிதா, விதொச எம்.நாச்சிமுத்து உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.