சேலம், நவ.6- ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் ஊடக வியாலாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, எப்ஐஆர் நகலை எரித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் போராட்டம் நடை பெற்றது. நியூஸ் கிளிக் என்ற சமூக வலை தள பத்திரிக்கை புதுதில்லியை மய மாகக் கொண்டு செயல்பட்டு வருகி றது. வரலாற்று சிறப்புமிக்க தில்லி விவசாயிகள் போராட்டத்தை, நியூஸ் கிளிக் பத்திரிகை நாடு முழுவதும் கொண்டு சென்றது. விவசாயிகள் எழுச்சிக்கு துணை நின்ற நியூஸ் கிளிக் ஊடகத்தின் மீது ஒன்றிய மோடி அரசு நஞ்சை கக்கி வருகிறது. இதனையடுத்து, ஒன்றிய பாஜக அரசு “விவசாயிகள் இயக்கம் தேசவிரோத மானது. வெளிநாடு மற்றும் தீவிரவாத சக்திகள் நிதி வழங்கினார்கள்” என்று குற்றஞ்சாட்டி நியூஸ் கிளிக் சமூக வலைத்தள நிறுவனத்தின் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிந் தது. மேலும், அதன் ஆசிரியர் மற் றும் செய்தியை வெளியிட்டவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்து பலி வாங்கி வருகிறது. இதனை கண்டித் தும், நியூஸ் கிளிக் ஊடகவிலாளர் களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நியூஸ் கிளிக் மீது போடப்பட்ட எப்ஐஆர் நகலை எரித்து விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஐக் கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராம மூர்த்தி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் அன்பழகன், துணைத் தலைவர் பி.தங்கவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எம்.கே.செல்வராஜ், ஏஐ கேஎம் செயலாளர் அய்யந்துரை, ஐக் கிய விவசாயிகள் சங்க அரங்க.சங்க ரய்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, விவசாயிகள் விரோத ஒன் றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.