உடுமலை, ஏப்.6- விவசாய பயன்பாட்டிற்கு குளங்க ளிலிருந்து வண்டல் மண் எடுக்க அனு மதி பெற வேளாண்துறை அலுவலகத் தில் விண்ணப்பங்கள் பெற்று கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதில், இடைத்தரகர்கள் முறைகேடு கள் செய்ய வாய்ப்புள்ளது. எனவே அதி காரிகள் மண் எடுக்கும் குளங்களில் தொடர் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுக்க, விண்ணப்பத்தில் விளை நிலத்தின் சிட்டா மற்றும் ஆதார் அட் டையை இணைத்து எந்த குளத்தில் வண் டல்மண் எடுக்க அனுமதி தேவை என்ற விவரங்களுடன் வேளாண்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தருமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை வண்டல் மண் எடுக்க விவசாய பயன்பாட்டிற்கு என்று வழங்கப்பட்ட அனுமதியில் இடைத்தரகர்கள் பல முறைகேடுகள் நடைபெற்றதை போல் இல்லாமல் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் எடுக்கும் குளங்களில் தொடர் ஆய்வு களை செய்ய வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு எடுத்த மண்னை விவ சாய நிலங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறுபவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கனரக வாகனங்களில் எடுத்த மண்னை சாலைகளில் கொட்டாமல் இருக்கும் வகையில் தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள்.