உடுமலை, ஆக.25- விவசாயிகளின் வாழ்வதராரத்தை பாதுகாக்க, கமிஷன் மண்டிகளில் நடை பெறும் முறைகேடுகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு வேளாண் துறையின் மூலம், விவசாய விளைப் பொருட்க ளின் உற்பத்தியை அதிகபடுத்தும் வகை யில் விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் விற் பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், விளைப் பொருட்களின் விற்பனை மட் டும் தனியார் கமிஷன் வியாபரிகளிடம் உள்ளது. உடுமலை மற்றும் மடத்துக் குளம் பகுதியில் தென்மேற்கு பருவ மழையால், நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து, காய்கறி மற்றும் மானவாரி சிறுதானியங்கள் பயிரிடுவதில் விவ சாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வியாபாரிகளும், தனி யார் கமிஷன் மண்டி உரிமையாளர் களும் இணைந்து, செயற்கையாக குறைந்த விலையை நிர்ணயம் செய்வதால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப் பொருட்களுக்கு கட் டுப்படியான விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உடுமலை பகுதி யைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகை யில், விளை நிலத்தில் உழவு, அடி உரம், விதை மற்றும் நாற்றுகள் வாங்கி பயிர் செய்து உற்பத்தி செய்த காய்கறிகளை, விற்பனைக்கு எடுத்துச் சென்றால் முத லில் காய்கறி ஏற்றி வந்த வாகனம் வாடகை, மார்கெட் செல்ல சுங்கவரி, இதன்பின் இறக்கு கூலி கடைசியில் கமிஷன் மண்டிக்கு 10 சதவிகிதம் கமி ஷன் எடுப்படுகிறது. மீதமுள்ள பணத் தில் தான் காய்கறிகளை எடுப்பதற்கான கூலி தர வேண்டும். வண்டி வாடகை, சுங்க வரி, இறக்கு கூலி மற்றும் அறு வடை கூலி அனைத்தும் உழைப்பிற் கான சம்பளம். ஆனால், எவ்வித உழைப்பு இல்லாமல் விற்பனையில் 10 சதவிகிதம் கமிஷன் எடுக்கப்படுகிறது. இந்த கமிஷன் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். விளைப் பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலை கிடைக் கும் வகையில், இடைதரகர்கள் இல்லா மல், உடுமலை கொல்லம்பட்டரை பகு தியில் இருக்கும் வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயி களின் குழுகள் மூலம், விளைப் பொருட் களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.