நாமக்கல், ஜன.4- உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிக ளுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வியா ழனன்று விவசாயிகள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். உயர்மின் கோபு ரங்களுக்கு எதிரான விவசாய சங் கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக் கும் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் நடை பெற்றது. தமிழ்நாட்டில் பவர்கிரீட் நிறுவ னம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர மைப்பு கழகம் ஆகிய இரண்டு நிறு வனங்களால் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டது. இதில் விவசாயி கள் நில மதிப்பு இழந்து பாதிக் கப்பட்ட நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக திட்டம் துவங்குவ தற்கு முன்பாக அனைத்து இழப் பீடுகளையும் வழங்க வேண்டும் என்ற உத்தரவை கடைப்பிடிக்கா மல், வேலை துவங்கும் போது தடுத்த விவசாயிகளை மிரட்டி மற் றும் கைது செய்து மின்கம்பங்களை நட்டனர். அதன்பின் முறையான இழப்பீடு வழங்கப்படவில்லை. இத னால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். புதி தாக மின் திட்டங்களை புதை வட கம்பிகள் மூலம் சாலையோரம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவ சாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் வியாழனன்று மாநிலம் தழு விய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவ சாயிகள் கூட்டியக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் படைவீடு பெரு மாள் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் செல்லமுத்து, சண்மு கம், பெரியசாமி, செங்கோட்டை யன், பழனிசாமி, கோவிந்தராஜ் மற் றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட உதவிச்செயலாளர் மு.து. செல்வராஜ், மாவட்டக்குழு உறுப் பினர் தங்கரத்தினம், பால் உற்பத்தி யாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். முடி வில், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தியிடம், விவ சாயிகள் பேரணியாக சென்று கோரிக் கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர்.