திருப்பூர், செப்.14- காங்கேயம் தாலுகாவிற்குட் பட்ட பகுதியில் தெரு நாய்களால் 16 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இதில், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் சமீப கால மாக தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து விவசாயிகளின் வாழ்வா தாரமாக இருக்க கூடிய செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் கன்று குட்டிகள் ஆகியவற்றை கடித்து கொன்று வருகின்றன. இந்நிலை யில் சனியன்று அதிகாலை காங்கே யம் வட்டம், கீரனூர் அருகில் மற வாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமியின் விவ சாய பூமியில் உறங்கிக் கொண்டி ருந்த 5 ஆடுகளை கூட்டமாக சென்ற தெரு நாய்கள் கடித்து கொன்றுள் ளன. மீதமுள்ள ஆடுகள் அனைத் தும் நாய் கூட்டங்களால் விரட்டப் பட்டு அங்கிருந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளன. இந்த சம்பவத் தில் மொத்தமாக 16 ஆடுகள் உயிரி ழந்துள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள ஆடுகளை இழந்து, விவசாயி பொன்னுச்சாமி தவித்து வருகி றார். தெரு நாய்களால் விவசாயிக ளின் ஒரே ஆதாரமாக இருக்கக் கூடிய கால்நடைகள் பாதிப்பது தொடர்கதையாக இருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டங்களில் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பல முறை எடுத்துரைத்தும், மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவ டிக்கையோ, வழிகாட்டுதலையோ, மேற்கொள்ளவில்லை. திருப்பூர் மாவட்டம் மற்றும் அரு காமை ஈரோடு மாவட்டத்தில் சமீ பத்தில் மட்டும் பல சம்பவங்கள் இது போன்று நடந்துள்ளன. நாய்கள் பிரச் சனையில் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கால்நடைத்துறை தெரிவித்துவிட்டது. கட்டுப்படுத்த வேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங் கள் இதைப் பற்றி கவலை கொள்வ தில்லை. விவசாயிகளின் முக்கிய ஆதாரமாக இருக்கின்ற ஆடு, கன்று குட்டிகளை, தெரு நாய் கூட்டங்க ளில் இருந்து பாதுகாப்பதற்கு அரசு உரிய திட்டங்களையும், செயல் பாடுகளையும் வகுக்க வேண்டும். நாய்களை கட்டுப்படுத்துவது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பொறுப்பு என்பதை உணரச் செய்து, இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். தற்போது ஆடுகளை இழந் துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப் பீடு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் நடக் காமல் தடுப்பதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.