districts

img

பொய் வழக்கு - விவசாய சங்க தலைவர்கள் விடுதலை

ஈரோடு, அக்.17- பவானி அருகே ஒன்றிய அர சிற்கு எதிரான போராட்டத்தில் ஈடு பட்டதாக விவசாய சங்க தலைவர் கள் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்த நிலையில், குற்றம் உறுதி செய்யப்படாத நிலையில் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். ஒன்றிய மோடி அரசு 2023-24க் கான நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறையை சீரழிக்கும்  வகையிலும். 100 நாள் வேலைக் கான நிதி ஒதுக்கீட்டையும் குறைத்து அறிவித்தது. இதனால். ஏற்கனவே நழிவடைந்து வரும் விவசாயம் பாதிக்கப்பட்டு விவ சாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி யைக் காட்டிலும் குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 100 நாள்  வேலை என்பது ஏற்கனவே ஆண் டுக்கு சராசரி 35 லிருந்து 40 நாட் கள் தான் வேலை வழங்கப்படுகி றது. தற்போது நிதி குறைப்பின் கார ணமாக இதை நம்பி வாழும் ஏழை  மக்கள் குறிப்பாக கிராமப்புற பெண் கள் வேலை நாட்களை இழந்து வறு மையில் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு வேளாண்மை துறைக்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கும் கூடு தல் நிதி ஒதுக்க வேண்டும், கிராமப் புற விவசாயம் மற்றும் 100 நாள்  வேலை பாதுகாக்கப்பட வேண்டு மென கடந்த 2023 பிப்ரவரி 11 ஆம்  தேதியன்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும், அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மாநில அளவில் ஒன் றிய அரசின் வேளாண் விரோத பட் ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக பவானி வட்டம், புன்னம் ஊராட்சி,  வேலாமரத்துாரில் தாலுகாத் தலை வர் என்.பாலமுருகன் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கத்தின் தாலுகாச் செயலா ளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ் வழக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு நீதி மன்றம் வாரண்டு பிறப்பித்தது. வழக்கு பவானி குற்றவியல் நீதி மன்றம் I இல் நடைபெற்று வந்தது.  அதன் தீர்ப்பு புதனன்று கூறப் பட்டது. இவ்வழக்கில் குற்றம் உறு திப்படுத்தவில்லை என தெரி வித்தது. அத்துடன் எஸ்.மாணிக் கம், என்.சின்னுசாமி, பிபி.பழனிச் சாமி, ஆர்.ராமாயி, குருவாயி, தேவி, மாறாயி, ராஜேஸ்வரி, மாதம் மாள் மற்றும் சரோஜா ஆகிய அனை வரையும் விடுதலை செய்து உத்தர விட்டது.  இவ்வழக்கில் திறம்பட வாதாடி  விடுதலையை பெற்றுத்தந்த மூத்த  வழக்கறிஞர் அந்தியூர் ஏ.எம்.மீரான்  மற்றும் வழக்கறிஞர் புன்னம் பிர காஷ், வழக்கறிஞர் ஜம்பை திரு நீலகண்டன் ஆகியோருக்கு விவ சாய சங்க தலைவர்கள் மற்றும்  மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள்  வாழ்த்துகளை தெரிவித்தனர்.