தருமபுரி, பிப்.21- பாலக்கோடு பகுதியில் விளைச் சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்துந்துள்ளதால் விவசாயிகள் கவ லையில் ஆழ்ந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக் கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பொப்பிடி, சோமனஅள்ளி, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஅள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகு திகளில் அதிக அளவில் தக்காளி சாகு படி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளை யும் தக்காளிகளை விவசாயிகள் அறு வடை செய்து பாலக்கோடு மார்க்கெட் டுக்கு விற்பனைக்காக கொண்டு வரு கின்றனர். அங்கிருந்து தேனி, திண்டுக் கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத் தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நாளொன்றுக்கு 100 டன் அளவுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கிடையில் பாலக்கோடு பகு தியில் தக்காளி விளைச்சல் அதிகரித் துள்ளதால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி ரூ.150க்கும், சில்லரையாக ஒரு தக்காளி ரூ.10க்கும் விற்பனையானது. இந்நிலையில் தக்காளி விலை மேலும் குறைந்து 15 கிலோ கூடை தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரை யும், சில்லரையாக ஒரு கிலோ ரூ.6-க்கும் விற்பனையானது. இதனால் தக்காளி விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து விவசாயி கள் கூறுகையில், பாலக்கோடு, காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், தற்போது அறுவடை செய்யப்படுகி றது. விளைச்சல் அதிகரிப்பால் மார்க் கெட்டுக்கு தக்காளி வரத்து அதிக ரித்துள்ளது. இதன் காரணமாக தக் காளி விலை கடும் வீழ்ச்சியை அடைந் துள்ளது. போதிய விலை கிடைக்கா ததால் கவலை அடைந்த விவசாயி கள் அறுவடை செய்யாததால் தோட் டத்திலேயே தக்காளி அழுகி வருகி றது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட் டுள்ளது என வேதனை தெரிவித்த னர்.