தருமபுரி, செப்.23- பூக்கள் விலை குறைந்துள்ளதால், தருமபுரி மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம், தொப்பூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பொம்மிடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். குண்டுமல்லி, கனகாம் பரம், சாமந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, பட்டன் ரோஸ், கோழி கொண்டை, அரளி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப் பட்டுள்ளன. இந்த பூக்கள் அனைத்தும் தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தினசரி நடைபெறும் பூக்கள் சந்தையில் விற்ப னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தருமபுரி பூக்கள் சந்தைக்கு, வரத்து அதிகரித்தது. இதனால் பூக்களை வாங்க ஆளில்லாமல், கேட்பாரற்று விலை குறைந்து விற்பனை யானது. தொடர்ந்து புரட்டாசி மாதம் தொடங்கியதால், பூக்களின் தேவை அதிகரித்து, விலை உயரும் என விவசாயி கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், புரட்டாசி முதல் சனி யன்றும் பூக்களின் விலை உயரவில்லை. இதனால் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை யடைந்துள்ளனர்.