சேலம், செப்.20- 200 ஆண்டு கால அனுபவ நிலத் திலிருந்து பழங்குடியின மக்களை வெளியேற்ற முயற்சிப்பதை கைவிட வேண்டும் என வலியு றுத்தி, காடையாம்பட்டியில் மலை வாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், காடையாம் பட்டி ஒன்றியம், கனவாய்புதூர் ஊராட்சியிலுள்ள 1.40 ஏக்கர் நிலத் தில், இருளர் இனத்தைச் சேர்ந்த 11 குடும்பத்தினர் 200 ஆண்டு கால மாக வீடு கட்டி விவசாசயம் செய்து வருகின்றனர். அப்பகுதி மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும். காவல் துறையை ஏவி, பழங்குடி மக்கள் தங்கள் நிலத்தில் வசிக்க விடாமல் சட்டவிரோதமாக தடுப் பதை கைவிட வேண்டும். பழங்குடி யின மக்களின் நலனுக்கு எதிராக செயல்படும் வருவாய் வட்டாட்சி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, வியாழனன்று காடையாம்பட்டி வருவாய் வட்டாட் சியர் அலுவலகம் அருகே தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் கிளைச் செயலாளர் எம்.ரவி தலைமை வகித்தார். இதில் மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.பொன்னு சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, துனைத்த லைவர் பி.தங்கவேலு, தாலூகா தலைவர் பி.அரியாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், காடையம்பட்டி வட் டாட்சியரிடம் சங்கத்தின் தலைவர் கள் மனு அளித்தனர். இதைத்தொ டர்ந்து பழங்குடி மக்களை நுழை யவிடாமல் தடுக்கப்பட்ட 200 ஆண்டு பாரம்பரிய நிலத்தில் சங்கத் தின் தலைவர்கள் ஆய்வு செய்து, வீட்டுமனை இல்லாத பழங்குடியின குடும்பங்களுக்கு இந்த நிலத்தில் வீட்டுமனை கேட்டு விண்ணப்பம் தருவதென முடிவு செய்யப்பட் டது.