districts

img

சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு? அசம்பாவிதங்கள் தவிர்ப்பு - பொதுமக்கள் அச்சம்

கோவை, ஆக.11-   கோவை பீளமேட்டில் எரி வாயு குழாய் ஆய்வு பணி யின் போது திடீரென எரி வாயு குழாய் ஏற்பட்டு வெடித் தது் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில், குழாய்களில் இயற்கை எரி வாயு வினியோகிக்கும் திட் டத்தை செயல்படுத்தும் உரி மையை, இந்தியன் ஆயில்  நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி கோவை நகரம் மற்றும் சுற்று  வட்டார பகுதிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ள நிலையில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குழாய்கள் மூலமாக காஸ் விநியோகிக்கப்பட உள்ளது.  இதற்காக, கோவை நகரம் மற்றும் சுற்று  வட்டாரப் பகுதிகளில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி மற்றும் கிராம ஊராட்சி சாலைகளில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அனுமதியுடன் குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் கோவை பீளமேடு தண் ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் ஆய்வு பணி நடைபெற்று வந்தது. அப் போது எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பொக்லைன் எந்திரம் மூலம் குழி கள் தோண்டப்பட்டது.இதில் மழைநீர்  தேங்கியிருந்த நிலையில், குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெடித்தது. இத னால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டல மாக காட்சியளித்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளி யாகி உள்ளது. இதில் எரிவாய் குழாய்  வெடிக்கும்போது அங்கிருந்த மக்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் பதறிய டித்து சென்றதும், பதிவாகியுள்ளது.எவ்வித  பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் இம் மாதிரியான ஆய்வுகளை மேற்கொண்ட தால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ள தாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்துள்ளனர்.

;