districts

img

பாசனப் பகுதியில் விரிவடையும் சாலைப்பணி

கோபி, பிப்.21- கோபி அருகே தடப்பள்ளி மற்றும்  கூகலூர் பாசன பகுதியில் இருந்த  குறுகிய சாலை, சுமார் ரூ.4 கோடி  மதிப்பீட்டில் புதிய தார்சாலையாக விரி வுபடுத்தும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள னர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள கருங்கரடு -  பெருந்தலையூர் சாலையில் தடப்பள்ளி  வாய்க்கால், கூகலூர் வாய்க்கால் பாசனப் பகுதியில் சாகுபடி பணி நடை பெற்று வருகிறது. அவ்வாறு சாகுபடி செய்யப்படும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைகளை அறுவடை செய்து, அசோகமர சாலை வழியாக விவசாயிகள் கொண்டு சென்று வரு கின்றனர். அறுவடை சமயத்தில் குறுகிய சாலை வழியிலேயே டிராக்டர்கள், லாரி கள் மற்றும் வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் இயந்திரங்களும் செல்வதால், அப்பகுதி நெரிசல் மிகுந்த  பகுதியாக மாறுகிறது. இது விவசாயிக ளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்து கிறது. இதனால் கருங்கரடு - பெருந்த லையூர் சாலையான அசோக மர  சாலையை மேவாணி பிரிவு வரை விரி வுபடுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில், அரசு சார்பில் ரூ. 4  கோடி மதிப்பீட்டில் 3.50 மீட்டர் சாலையை 5.50 மீட்டர் அகல சாலை யாக விரவுபடுத்தும் பணி, சாலையின் இருபுறங்களிலும் நடைபெற்று வரு கிறது. மேலும், சாலை ஓரம் வாய்க்கா லில் தண்ணீர் செல்லும் பகுதிகளில்  பக்கவாட்டு சுவர்களும் அமைக்கப் பட்டு வருவதால் தடப்பள்ளி, கூகலூர் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.