உடுமலை, மே 3 - உடுமலையில், முன்னாள் ராணுவ வீரர் நல சங்க கூட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள லெப்டினென்ட் சுபாஷ் ரேணு காதேவி அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது. கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன் தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரர்க ளுக்கு கிடைக்கும் ஈசிஎச் சேவையில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு முறையான சேவைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும், தனித்தனியே இயங்கி கொண்டிருக்கும் முன்னாள் ராணுவ வீரர் சங்கங்கள் அனைத்தும் ஒருங்கி ணைப்பு செய்வது, சீருடை சேவைகளுக்கான உடல் தகுதித் தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும் பயிற்சிகள் கொடுத்தல், முன்னாள் ராணுவ வீரர்களின் ஆவணங்களில் உள்ள பதிவு களை ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி உடையதாக திருத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தல், கடற்படை, விமானப் படை, காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு நடத்தப்படும் அனைத்து வகையான போட்டித் தேர்விற்கான பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, கோவை மாநகர மண்டல தலைவர் ராமநாதன், பொருளாளர் சிவக்கு மார், துணைத்தலைவர் கோவிந்தராஜுலு, விமானப்படை லெப்டினென்ட் தங்கவேல், நாயப் சுபேதார் நடராஜ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.